(Reading time: 17 - 33 minutes)

“நீங்க கண்ணை மூடிக்கோங்க, அப்ப தான் நான் வெளியே வருவேன்” என பூஜா கூற..........

“நான் கண்ணை மூடிக் கொண்டே வந்தால், கையை நீட்டிக் கொண்டு வர வேண்டி இருக்கும். உனக்கு பரவாயில்லையா? என இந்தர் குறும்புடன் கேட்க..........

“வேண்டாம், வேண்டாம் நீங்க கண்ணை திறந்து கொண்டே வாங்க” என அலறினாள் பூஜா..........

“கூல் கூல் என்ற படி உதட்டோர புன்னகையுடன் குளியலறைக்குள் நுழைந்தான் இந்தர். அவன் உள்ளே சென்றதும் பூஜா கதவை வெளியே இருந்து பூட்டினாள், நிம்மதியாக உடை மாற்றலாம் என்று.  

அந்த அலமாரியை திறந்த பின் தான் தெரிந்தது, அதில் இருந்தது எல்லாம் வெஸ்டர்ன் டிரஸ் என்று. அது இருந்த கட்டை குட்டையை பார்த்த பின், தனது பழைய துணிகளையே அணிந்தது கொள்ளாலாம் என தோன்றியது பூஜாவிற்கு.

குளியல் அறை கதவை தட்டி “இந்தர் என்னோட உடைகளை எடுத்து கொடுங்க, என்னால் இங்கு இருக்கும் துணிகளை போட முடியாது” என வெட்கத்துடன் கூறினாள் பூஜா...........

“இடத்துக்கு தகுந்தார் போல் உடை அணியலாம்டா, இடம் மட்டும் வெஸ்டனைஸ்டா இருந்தா ரசிக்கற, பின்பு உடையிலும் அதையே கடைபிடிக்க வேண்டியது தானே.  இங்கு நம்மை தவிர யாரும் இல்லை, அதனால் பயப்படாமல் போடு” என்று கூறினான்.

“முடியாது இந்தர், நான் போட்டு வந்த சுடிதாரையே கொடுங்க ப்ளீஸ்”  என கெஞ்சினாள் பூஜா.........

அதற்குள் இந்தர் குளித்து முடித்து வெளியவே வந்துவிட்டான். “ நானே எடுத்துக்கறேன்” என கூறி உள்ளே நுழைந்த பூஜா அங்கிருந்த அவளின் சுடிதாரின் நிலையை பார்த்து விக்கித்து விட்டாள். அங்கிருந்த வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி அது உயிரை விட்டிருந்தது.

அதற்குள் அவனது இரவு நேர பைஜாமாவை அணிந்திருந்தான் இந்தர்.

“ஜித்து” என சிணுங்கியபடி அவள் வந்த பொழுது......

“அதில் இருக்கும் எதாவது ஒரு உடையை போடு. நான் போய், நமக்கு பால் சூடு செய்து எடுத்து வருகிறேன்.”  என்றபடி அங்கிருந்த மேல் தளத்திருக்கு விரைந்தான்.

அவன் சென்றவுடன் அந்த அறை கதவை அடைத்து தாளிட்டாள் பூஜா....... இருந்ததில் பெரிய உடையாக எடுத்து அணிந்து கொண்டு, இந்தரை இதற்கு எப்படி பழி வாங்கலாம் என யோசிக்க துவங்கினாள்.

இந்தர் பாலுடன் வந்து அறை கதவை தட்டிய பொழுது, “ஜித்து நீங்க வரவேற்பறையிலேயே படுத்து கொள்ளுங்கள். அங்கு சோபா பெருசா நல்லா தான் இருக்கு” என்று கதவை திறக்காமல், வந்த சிரிப்பை, குரலில் தெரியாமல் மறைத்து பேசி முடித்தாள் பூஜா......

“சரி, நீ இந்த பாலை மட்டும் வாங்கிக்கோ” என இந்தரும் புன்னகையுடனே கூறினான்.

“எனக்கு பாலும் வேண்டாம், பழமும் வேண்டாம். எனக்கு தூக்கம் தான் வருது. நான் தூங்க போறேன். நீங்களும் போய் படுங்க.”

“என்னடா சொல்ற? எனக்கு கேட்கல. கொஞ்சம் கதவை திறந்து சொல்லு.”

“அஸ்கு புஸ்கு, நான் கதவை திறக்க மாட்டேன்.” என்று கூறி வெட்கத்துடன் கூடிய சிரிப்புடன் கதவின் அருகிலேயே நின்றிருந்தாள்.

சிறிது நேரம் ஒரு சத்தமும் இல்லை கதவுக்கு பின் புறம். ஒரு வேலை படுக்க போய் விட்டானோ என்று எண்ணி, கதவில் இன்னும் அழுத்தமாக காதை வைத்து கேட்டாள் பூஜா. ம் ஹும் , ஒரு சத்தமும் இல்லை.

சிறிது நேரத்தில் இந்த ஜித்து என்ன தான் செய்து கொண்டிருக்கிறான் என்று நினைத்து கொண்டிருந்த பொழுதே பின்னால் இருந்து இரண்டு கைகள் அவளை அணைத்தது. அவனுக்கு முன்னால் அவனது Azzaro Perfume ன் வாசனை அவளை அணைத்தது.

“நீங்க எப்படி உள்ளே வந்திங்க? என ஆச்சரியமாக கேட்டாள் பூஜா.......

“இங்க அவசர கால கதவு இருக்குடா” என்று அங்கிருந்த  மேற் கூரையை காட்டினான். அப்படியே அவளை தன்னுடன் சேர்த்து இன்னும் இருக்க அணைக்கவும் செய்தான்.

“இது சீட்டிங் வேலை, நான் ஒத்து கொள்ள மாட்டேன், விடுங்க என்னை”

இந்தரும் அவளை விட்டு விலகி நின்றான். அவன் என்ன செய்கிறான் என்று திரும்பி பார்த்த பூஜா, அவன் அவளை விட்டு விலகி நின்று அவளது சிறிய ஆடையில் இருந்த அவளது அங்கங்களை  ரசித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த பூஜா அவன் அருகில் வந்து அவனது கண்களை மூடி “போதும் நீங்க ஒன்னும் பார்க்க வேண்டாம்.” அவனை அனைத்துக் கொண்டாள். அந்த சிறிய அறையில் எங்கும் ஓடவும் முடியாது, ஓளியவும் முடியாது.

அவள் அணைத்த வேகத்தில் அங்கிருந்த படுகையில் இருவரும் சேர்ந்ததே விழுந்தனர். “என்னை விட வேகமா இருக்கடா” என்று இந்தர் அவளை கிண்டல் அடிக்க..........

“ஹையோ, எனக்கு வெட்கமா இருக்கு. ப்ளீஸ் ஜித்து ஒரு பாட்டு பாடுங்களேன்” என முறையிட்டாள் பூஜா அவன் மார்பில் சாய்ந்து .........

படுக்கையில் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற இந்தர் பாட ஆரம்பிதான்.

மாலை மங்கும் நேரம் ,

ஒரு மோகம் கண்ணின் ஓரம்

உன்னை பார்த்துக் கொண்டே நின்றாலும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.