“நீ பெரியவனாயிட்ட மித்ரா. நான் சொல்லி உனக்கு தெரியனும்னு இல்லை. யோசிச்சு நட...”
நளினி சொல்லிவிட்டு சென்று விட, மித்ரனின் கல்லான இதயத்தில் கூட எதுவோ ஒன்று அசைந்தது...
அவன் எப்போதுமே அம்மா பிள்ளை... காலேஜ் படித்த காலத்தில் கூட அம்மாவின் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பான்... அம்மாவின் வாயில் இருந்த சின்னதாக பாராட்டை கேட்பது கூட அவனுக்கு நோபல் பரிசு பெறுவது போல தனிச்சிறப்பானது....
அதே அம்மா இப்போதெல்லாம் அவனிடம் யாரோ ஒருவனிடம் பேசுவது போல பேசுவதும்... அதன் பின்னே இருக்கும் அவர்களின் வலியும்... அவனுக்கு தெளிவாக புரிந்தது... ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை...
அவனின் இதயத்தில் இருந்த ரணம் இப்போதும் வலித்துக் கொண்டே இருந்தது...
அதை பற்றி யோசிக்க விரும்பாது மனதை திசை திருப்ப முயன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தது....
“கந்தசாமி...” என்று அவன் அழைத்த உடன், ஓடி வராத குறையாக அவன் முன் வந்து நின்றார் அவர்.
“என்ன இது? ஏன் லாக்காகி இருக்கு?”
மித்ரன் சுட்டிக் காட்டிய பக்கம் இருந்த அலமாரியை பார்த்து விட்டு,
“இது...” என்று தயக்கத்துடன் இழுத்தான் கந்தசாமி...
“என்ன?”