திடீரென இரண்டு மூன்று கார்கள் அங்கு வந்து நின்றன. விஷ்வாவும், ஆர்ட் டைரக்டரும் வந்தார்கள். இன்னும் சில வேலையாட்களும் உடன் வந்தனர்.
அமேலியாவை அருகில் இருந்த அறையில் மறைத்தான் வசந்த்.
"வாங்க சார்" என்று வரவேற்றான் வசந்த்.
அவனுக்கு பதில் கூறாத விஷ்வா, வீட்டை சுற்றி ஒரு நோட்டமிட்டுவிட்டு, "பரவாயில்லை, வேலை நல்லாவே நடந்திருக்கு" என கூறியவர், பின்பு ஆர்ட் டைரக்டருக்கு சில கட்டளைகளை பிறப்பித்தார்.
"ஜெஸிகா எங்க?"
"அவ உள்ள தூங்கிட்டு இருக்கா" என்ற ஜான். "ஜெஸிகா ஜெஸிகா" என்று அழைக்கவும் செய்தான்.
கண்களை கசக்கியபடி வந்த ஜெஸிகா, "ஏண்டா என்னை கூப்பிட்ட? அந்த டைரக்டர் தான் என்னை தூங்கவிட மாட்டுறான். நீயுமா?" என்றபடி விஷ்வாவை நோக்கிய ஜெஸிகா அதிர்ச்சி அடைந்தாள்.
"சார் சார். நீங்க எப்போ வந்திங்க?"
"இப்போ தான்"
ஆர்ட் டைரக்டர், விஷ்வாவிடம் கதையைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அமேலியாவை திரும்பவும் கார் ஷெட்டில் மறைத்துவைக்க எண்ணி அறையின் கதவைத் திறந்து அமேலியாவை அழைத்துக்கொண்டு சென்றான் வசந்த்.
"அதெல்லாம் இல்லை சார். கதைப்படி நாயகன் நாயகிகிட்டே ஐ லவ் யு சொல்லுறான்"
ஐ லவ் யு என்ற அந்த வார்த்தைகள் அமேலியாவை அதிர்ச்சியாக்கியது.
'அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன?'
தொடரும்...
{kunena_discuss:983}