(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 02 - ஜெயந்தி

kadavul potta mudichu

திக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் ரதி இப்படி சிரிக்கற.நா என்ன ஜோக்கா சொன்னேன்.எதுக்கு சிரிக்கறன்னு சொல்லிட்டு சிரி”என்றான் ஆதி

“பின்ன என்னங்க .நந்தினிதான் என்ன கடத்தினான்னு நீங்க சொன்னா சிரிக்காம என்ன செய்வாங்க., நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க அவ என்னோட ரெண்டு வயசு சின்னப் பொண்ணு அவ போய் என்ன எப்படி கடத்தியிருக்க முடியும்” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“அவளே கடத்திருக்கனும்னு அவசியம் இல்லை,அவளுக்கு தெரிஞ்ச வேற யாரையாவது  வச்சு உன்ன கடத்தியிருக்கலாம்”

“எத வச்சு நீங்க நந்தினிய சந்தேகப் படுறீங்க”

“அவ என்னோட ஆபிஸுக்கு வந்து உன்ன பத்தி என்கிட்ட தப்பா சொன்னா”

“இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வச்சு நீங்க அவள சந்தேகப்படுறீங்களா”

“அது மட்டுமில்ல”

“ம்.அப்புறம்”

“அவளுக்கு தெரிஞ்ச ஒரு பொண்ண என்கிட்டே அனுப்பி வேற மாதிரி நடந்துக்க சொல்லிருக்கா”

“அது நந்தினிதா செஞ்சிருப்பான்னு எப்படி சொல்றீங்க”

“இங்க பாரு ரதி, உனக்கு நல்லாவே தெரியும் என்னோட பணத்துக்காக நெறைய பேர் என்ன எப்படியாவது தன்னோட வலையில விழ வைக்கணும்ன்னு நெனப்பாங்க.அதனால அந்த மாதிரி பொண்ணுங்களோட பீகேவியர் எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரியும்.ஆனா நந்தினி அனுப்புன பொண்ணு அவங்கள விட கொஞ்சம் வித்தியாசமா இருந்தாங்க.அதனால என்னோட டிடெக்டிவ்வ வச்சு விசாரிக்க சொன்னேன்.அவங்கதா எனக்கு அந்த பொண்ண அனுப்புனது நந்தினின்னு  சொன்னாங்க”

“அது மட்டுமில்ல என்னோட அப்பாட்ட என்ன சொன்னான்னே தெரியல ஒரு தடவ என்னோட அப்பாவ பாக்க வந்திருந்தா அதுக்கப்றம் அவரு என்ன கூப்ட்டு நீ ரதிய கல்யாணம் செஞ்சேன்னா உனக்கு என்னோட சொத்துல இருந்து ஒரு பைசா கூட தரமாட்டேன்னு சொல்லிட்டாரு” என்றார்.

“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க”

“உங்க சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம் எனக்கு ரதி மட்டும் போதும்ன்னு சொல்லிட்டேன்”

“அப்புறம் எப்படி அவர் நம்ம மேரேஜ்சுக்கு சம்மதிச்சாரு”

“அம்மாவும், சரண்யாவும் சேர்ந்து அவர எப்டியோ சமாதானப் படுத்திட்டாங்க”

“ஓகே, நீங்க நத்தினிய சந்தேகப் படுறதுக்கு இவ்ளோதா காரணம் இருக்கா இல்லை இன்னும் வேற ஏதாவது காரணம் இருக்கா”

“நா இவ்ளோ சொன்னதுக்கே  நியாயமா உனக்கும் அவமேல சந்தேகம் வந்துருக்கணும் .ஆனா நீ ரொம்ப இன்னோசன்ட்டா இருக்க.அதனால உனக்கு அவ மேல சந்தேகமே வர மாட்டேங்குது”

“நந்தினி நீங்க நெனைக்கிற மாதிரி பொண்ணு கெடையாது. நீங்க சொன்ன எல்லாமே எனக்கு ஏற்கனவே தெரியும்.அவ நீங்க என்ன உண்மையாவே லவ் செய்றீங்களான்னு செக் செய்றதுக்காகத்தான் அப்படில்லாம் நடந்துகிட்டா”

“என்னப்பத்தி யாராவது உங்ககிட்ட தப்பா சொன்னா அத நீங்க நம்பறீங்களா ,மத்த பொண்ணுங்ககூட நீங்க எப்படி நடந்துகிறீங்க,பணமா நானான்னு வர்ரப்ப் நீங்க எதுக்கு முக்கியத்துவம் குடுக்கறீங்க இதெல்லாம் தெரிஞ்சுக்கத்தான் அவ  அப்படில்லாம் நடந்துக்கிட்டா”

‘இதெல்லாம் உனக்கு முதல்லையே தெரியும்ன்னா ஏன் என்கிட்டே அத நீ சொல்லல.அப்ப நீயும் என்னோட காதல சந்தேகப்பட்டியா”

“அப்டில்லாம் ஒன்னும் இல்லை.அவளே எதையும் என்கிட்ட செய்றதுக்கு முன்னாடி சொல்ல மாட்டா.ஏன்னா அத நா உங்ககிட்ட சொல்லி,அப்புறம் நீங்க அலெர்ட் ஆகி அதுக்கேத்த மாதிரி ரியாக்ட் செய்வீங்கன்னு.என்கிட்ட அவ இத சொன்னதே நமக்கு கல்யாணம் நடக்கிறதா இருந்ததுக்கு முத நாள்தான்”

“நீங்க ஏன் அவளைப்பத்தி என்கிட்ட முதல்லையே சொல்லல”

“அவள பத்தி சொல்லி தேவை இல்லாம உன்ன ஏன் டென்ஷன்  படுத்த வேண்டாம்ன்னுதா.சரி நீதான சொன்ன அவதா உன்கிட்ட சொல்லி சினிமா ஆசையில நீ கல்யாண  மண்டபத்த விட்டுப் போறதா எழுத சொன்னான்னு”

“நீங்க எங்க என்ன முழுசா சொல்ல விட்டீங்க.அதுக்குள்ளதான் நந்தினிதா என்ன கடத்துனதுன்னு சொல்லி சிரிப்பு வர வச்சுட்டீங்கள்ள”

“சரி, இப்ப சொல்லு. என்னபத்தி வேற என்ன தெரிஞ்சுக்கறதுக்காக இப்டி செஞ்சான்னு”

“இப்ப செஞ்சது உங்களை செக் செய்ய இல்லை”

“அப்புறம் வேற எதுக்காக”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.