(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 09 - ஸ்ரீ

anbin Azhage

“சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்

உன் மதியால் என் மனதை

நீதான் வசியம் செய்தாய்

அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்

இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா

காதலுக்காக உந்தன் நெஞ்சை

கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா

தீராதா உன் அன்பினால் போராடி

என்னை வென்றதால்

என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்

தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்

உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்..”

றுநாள் காலை சென்னைக்குத் திரும்பியிருக்க அபினவ் அவளீடம் எப்போதும் போலவே இயல்பாய் இருந்தான்.ஆனால் அவளால் தான் தான் செய்ததை சாதாரணமாய் விட முடியவில்லை.அவனை மிகவும் நோகடித்து விட்டோமோ என மனதளவில் ஒடீந்து போயிருந்தாள்.

அது தெரிந்திருந்ததவனும் ஒன்றும் கேட்காமல் அமைதியாய் இருந்தான்.இருந்தும் அவளை தன்னருகிலேயே அமர்த்திக் கொள்ள அத்தனையையும் செய்தான்.

“திஷா டைம்ஷீட் பில் பண்ணணும் அர்ஜெண்ட் ப்ளீஸ் எனக்கு தட்டுல சாப்பாடு போட்டு இங்கேயே எடுத்துட்டு வர்றியா?”

“ம்ம் சரிங்க இதோ வரேன்”,என்றவள் தன்னவனுக்காய் வேக வேகமாய் எடுத்து வந்தாள்.

அவனுக்கு அது முக்கியமான வேலை இல்லையெனினும் அவளை சரி செய்வதற்கு இதெல்லாம் தேவையோ என தோன்ற உணவை அவள் ஊட்டி விட உண்ண ஆரம்பித்தான்.

அவனோடு சேர்ந்து அவளையும் சாப்பிட வைத்தான்.இரவு வரை அப்படி இப்படியாய் சமாளித்தவளுக்கு உறங்கச் செல்லும் நேரம் மறுபடியும் ஒருவித பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.எங்கேயோ வெறித்தவாறே ஹாலில் நின்றிருந்தவளை பின்னிருந்து இடைப்பற்றி அவன் இழுக்க,

“ஐயோ அத்தை மாமா யாராவது வந்துர போறாங்க..”

“தெரியுதுல அப்பறம் என்ன இங்க நின்னு கனவு கண்டுட்டு இருக்க..தூக்கம் வரலையா?”

“இல்லங்கஅது ஏதோ யோசனையில..”

“ம்ம் நல்லா யோசிக்குற..வா பேபி..”,என அழைத்துச் சென்றான்.வழக்கம் போல் திஷா ஓர் ஓரமாய் கட்டிலில் அடைக்கலம் தேட,

“திஷாஷா..”,அர்த்தமுள்ள அழைப்பு அவனிடமிருந்து.அது புரிந்தவள் மெதுவாய் அவன்புறம் திரும்பிப் படுத்தாள்.

அவன் ஒன்றுமே கூறாமல் அவளையே பார்த்திருக்க விழி தாழ்த்தியவளாய் தானாய் அவனருகில் நகர்ந்து படுத்தாள்.உதட்டோர புன்னகையோடு கையை தலைக்கடியில் வைத்தவாறு அவளைப் பார்த்தவன் அவளின் முன் தலையில் செல்லமாய் தட்டினான்.

“டீச்சரம்மா வர வர என்கிட்ட ஸ்டுடண்ட் மாதிரி பிகேவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..என்னாச்சு டியர் என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு..”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க..சாரி..”

“சாரியா எதுக்கு டா?”

“நேத்து நா அப்படி நடந்துகிட்டதுக்கு..”

“ஹே இன்னுமா நீ அதை நினைச்சுட்டே இருக்க..நானே ஒண்ணும் சொல்லல அப்பறம் என்ன திஷா..கல்யாணம் நடந்ததுக்காக எல்லாமே உடனே நடந்தாகனும்னு எந்த கட்டாயமும் இல்ல டா..அதுவா இயல்பா நடக்கனும்.நேத்தும் அப்படிதான் ஆச்சு..அதையும் தாண்டின ஏதோ ஒன்னு உன்னை அன்கம்பர்டபிளா பீல் பண்ண வச்சுருச்சு..

சொல்ல போனா என் மேல தான் தப்போனு கூட யோசிச்சேன்.என்னதான் என் கன்ட்ரோலை இழந்திருந்தேன்னாலும் உன்னை ஹர்ட் பண்ணிறகூடாதுனு நிச்சயமா கவனமா தான் இருந்தேன் திஷா..அதையும் மீறி..ஐ அம் சாரி..”,என்றவன் அவள் கையை எடூத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

“ஐயோ சத்தியமா அதெல்லாம் இல்ல..எனக்குதான்..நாதான் தேவையில்லாம..”

“சரி விடு திஷாம்மா..ரிலாக்ஸ்..ரெண்டு நாளா எவ்ளோ ஹாப்பியா இருந்த அப்படியே இரு வேற எதையும் போட்டு குழப்பிக்காத..ஒழுங்கா தூங்கு”,என்றவாறே தன் கையை அவள் தலைக்கடியில் நீட்ட தன்னோடு சேர்த்து நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தான்.

“நாளையிலிருந்த ஆபிஸ் செம கடுப்பு பேபி..நைன் அவர்ஸ் வில் மிஸ் யூ பேட்லி..ஆமா நீ எப்போ ஸ்கூல் போக ஆரம்பிக்க போற?”

“”நா இன்னும் டூ டேஸ் கழிச்சு போலாம்னு இருக்கேன்..இவ்ளோ லாங்க் லீவ் எடுத்ததேயில்லையா அதான் ஒரு மாதிரி சோம்பேறி தனமா இருக்கு..”

“அப்போ பசங்க இன்னும் ரெண்டு நாள் ஜாலியா இருப்பாங்கனு சொல்லு..”

“பசங்க மட்டுமா இல்ல அன்னைக்கு சாரு சொன்ன மதிரி நீங்களுமா?”,என்றவள் சிரிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.