பொதுவாக சேலை கட்டி பெரிதும் பழக்கமில்லாத சரண்யாவிற்கு இந்த போட்டோ செஷன் கடுப்பானதாக இருந்தது. ஒவ்வொரு பக்கம் திரும்பும் போதும் சேலை எங்கே எப்படி இருக்கிறதோ என்ற கவலை வேறு அவளுக்கு இருந்தது.
போட்டோக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாலும் சரண்யாவிடம் ஏற்பட்டிருந்த சின்ன கலக்கத்தையும் எப்படியோ புரிந்துக் கொண்ட கோபி, மெல்லிய குரலில் அவளிடம் விஷயத்தைக் கேட்டு தெரிந்துக் கொண்டான்.
உடனே, “ரொம்ப முக்கியமான பிரென்ட்ஸ் வந்திருக்காங்க. நான் அவங்க கிட்ட பேசனும். கொஞ்சம் நேரம் கழிச்சு போட்டோ எடுக்கலாம்” என்று அவனுக்காக கேட்பது போல கேட்டு அவளுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தான்.
அந்த நொடியிலேயே கோபி அவளின் மனதில் மிகவும் உயர்ந்துப் போனான்.
அதன் பின் வந்த நாட்களில் கோபி எப்போதுமே அவளுக்கு ஸ்பெஷலானவனாக மாற
...
This story is now available on Chillzee KiMo.
...
ளின் கைப்பையினுள் இருந்த மொபைல் போன் ஓசை எழுப்பி அவளை அவளின் நினைவுகளில் இருந்து மீண்டு கொண்டு வந்தது.
போனை கையில் எடுத்து பார்த்தவள், அழைப்பது நளினி என்பதை உணர்ந்து அவசரமாக அட்டென்ட் செய்தாள்.
“சரண்யா”
“சொல்லுங்கம்மா?”
“டைம் ஆச்சு, இரண்டு பேரும் சாப்பிட வாங்க”