தொடர்கதை - ராணி... மகாராணி... - 19 - ராசு
"நான்தான் சொன்னேன்."
மகாராணிக்கு தாங்கள் வரப்போவதை தான் சொன்னதாக ஒத்துக்கொண்ட மோனியை அனைவரும் திகைப்புடன் பார்த்தனர்.
அவள் எப்போது, எங்கே மகாராணியைப் பார்த்தாள்?
அந்தக் கேள்விதான் அனைவரின் மனதினுள்ளும் எழுந்தது.
அதற்கும் அவள் அலைபேசி வாயிலாக அவளைத் தொடர்பு கொண்டதை அறிந்ததும், இருவருக்குள்ளும் எப்படி அறிமுகம் ஆனது?
இந்தக் கேள்விதான் மற்றவர்களைக் குடைந்தது. ராஜன் பாபு மட்டுமே மோனியை மகாராணிக்குத் தெரியும் என்று அறிந்தவன். அவனுக்குமே இருவரும் பேசிக் கொண்டது ஆச்சர்யமான செய்தியாகத்தான் இருந்தது ... தற்கு அவங்கதான் காரணம்
This story is now available on Chillzee KiMo.
...
என்றவள் காதலன் என்று அவள் நம்பிய அந்தக் கயவன் நடந்து கொண்ட விதத்தையும், தான் தப்புவிக்கப் பெற்ற சூழ்நிலையையும் அவர்களிடம் சொன்னாள்.