தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 06 - ராசு
வேலைகளை முடித்துவிட்டுப் படுத்த அமுதநிலாவிற்கு உறக்கம் வரவில்லை.
இன்றைய தினம் அவள் இளங்கனியனைக் கண்டதிலிருந்து அவளுக்குத் தன்னுடைய கல்லூரிக் கால நினைவுகள் வந்து போயின. அத்துடன் அவளது தந்தையின் நினைவுகளும். அவர் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் என்னுடைய நிலைமை இப்படியா இருந்திருக்கும். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். அம்மாவையும், அக்காக்களையும் இன்னும் நன்றாகப் பார்த்துக்கொண்டிருந்திருப்பேன்.
இதுதான் அவள் மனதை உறுத்திக் கொண்டிருப்பது.
அவள் என்ன ஆசைப்பட்டு என்ன பயன்? நடந்ததை மாற்ற ... n>இங்கே வா
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்குத் தன் உருவத்தைக் கிண்டல் செய்து அழைத்த அந்தக் குரலை பிடிக்கவில்லை.
திரும்பிப் பாராமல் அவள் நடந்தாள். ஒருவன் அவள் எதிரே வந்து மறைத்தான்.