(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவர்கள் இருவரும் குளித்து தயாராகும்போதே அந்த பாஸ்கர் வந்து விட்டார்.

“ம், கிளம்பலாமா?’ என்றார்.

“சரி சார்” என்று அதிதி உற்சாகமாக முந்தினாள்.  இதுல என்ன உற்சாகம்?

இருவரும் ஜீப்பில் ஏறிக் கொள்ள ஜீப் காடு நோக்கி விரைந்தது. சிறிய ஓடை… குன்று… பள்ளத்தாக்கு. புல்வெளிகள். இத்தனையையும் தாண்டி அடந்த வனப்பகுதிக்குள் சென்றது.  நீண்ட  நேர சிரம்மான பயணத்தின் பின்  வண்டியை  நிறுத்தினார்.

“வந்தாச்சு. இரண்டு பேரும் இறங்குங்க. இதுதான் நீங்க தங்கப் போகும் இடம்.”

“இங்கேயே… தங்கறதா…? வீடு எதுவும் இல்லை” அதிரதன் திடுக்கிட,

“”வீட்டில் தங்கப் போகிறீர்கள் என்று யார் சொன்னது. அதோ அந்த மரத்தில் தெரியுதே பரண் அதில்தான் தங்க வேண்டும். உங்களுக்கு தேவையான சில பொருட்கள் அங்கே இருக்கின்றன. அப்புறம் இது ஒரு ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட சிக்னல் ரேடியோ. கோர்ட் ஆர்டரை ப்ரேக் செய்ய நினைத்தாலோ அல்லது யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனாலோ இந்த கருவியை ஆன் செய்யுங்கள். நாங்கள் வந்து உங்களை அழைத்து செல்வோம். அப்புறம் இந்த கேமிராவில் உங்கள் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள். பின்னர் தேவைப்படும்… ம்.. எல்லாம் நல்லபடியாக  நடந்தால்… ஐந்து நாட்கள் கழித்து சந்திப்போம்”

அவர் ஜீப்பில் ஏறி கிளம்பி விட்டார். அவர் செல்வதையே முறைத்துக் கொண்டு அதிரதன் நின்றான். ஓ அப்பா… ஏன் இப்படி செய்கிறீர்கள்? உங்களுடைய செல்ல மகனை செல்லமாக வளர்த்து இப்படி செய்து செய்து விட்டீர்களே?

“என்ன சார் யோசனை?”

“ஆங்… அப்பாவை நினைத்தேன்.  நான் இப்படி கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ளவே மாட்டார்.”. இந்த பொண்ணுகிட்ட இந்த ப்ளானே அவருடையதுதான் எண்ற உண்மையை சொல்லணுமாக்கும்! 

“ ஏன் சார்?”

“ என் மீது அவ்வளவு பிரியம்! ஒரு அட்வென்சர் ஹீரோவை வளர்ப்பதுபோலவா வளர்த்தார்… செல்லமாக வளர்த்தார். எனக்கு ஒரு குறையும்…”

“புரியுது புரியுது… இளவரசன்போல வளர்த்திருக்கார். இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்.. அதில் பட்டுத் துகிலுடன் அன்ன சிறகினை மெல்லவே இட்டு வைத்தேன்…”

பாட்டெல்லாம் நன்றாகத்தான் பாடினாள். ஆனால் அந்த உதட்டின் கடையோரத்தில் ஒரு கேலி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.