"அட்லீஸ்ட் இந்த குழந்தையை காப்பாத்தி நல்ல படியா வளர்க்கனும்னு நினைச்சேன். அதுவும் முடியாம போச்சு"
அப்போது சர்மா பேச ஆரம்பித்தார்.
"நான் ஒன்னு செய்றேன் இந்த பொண்ணோட உயிரை காப்பாத்தி தரேன். அதுக்கான சிகிச்சை செய்றேன். ஆனால் இந்த மாறிப்போன பயாலஜி குவாலிட்டீஸை ரிவர்ஸ் பண்ண முடியாது… அதாவது இப்போதைக்கு முடியாது.. இன்னும் மரபணுவியலில் புதிய முறைகள் கண்டு பிடிக்கப்படலாம். அப்போது இது சாத்தியமாகலாம்." அவர் பேசிக் கொண்டே அபிதாவிற்கு சிகிச்சை செய்தார்.
அபிக்கு அவருடைய உதவி தேவை எனபதால் அவரை எதிர்க்காமல் க்ருபாவும் அமைதியாக இருந்தான்.
அபிதாவிற்கு சிகிச்சை செய்தபின்… அவனிடம் திரும்பியவர்,
"இனி உயிர் பிழைச்சுக்கும். யாராவது வரும் முன் இங்கிருந்து கிளம்பிடுங்க." அவனிடம் ஒரு ஃபைலை நீட்டினார்.
"இதுல இந்த பொண்ணுக்கு என்ன சாப்பிட தரணும்.. என்ன நடந்தது… அவளை பழைய நிலைக்கு கொண்டு வர என்ன செய்யலாம்னு தியரிடிக்கலா எழுதியிருக்கேன். உங்களுக்கு தேவைப்படலாம்." பேசும்போதே நெஞ்சில் கை வைத்தபடி சரிந்தார்… அபிதாவின் தலையில் கை வைத்து,
"ஐம் சாரி" என்று சொல்லி கண்ணை மூடினார். இனி அவரால் அவனுக்கு உதவ முடியாது என்று புரிந்து கொண்ட க்ருபா அபிதாவை தூக்கி கொண்டு வெளியேறினான்.
"இப்படித்தான் உன்னை கண்டுபிடிச்சேன். நீ சுயநினைவிற்கு வர… எழுந்து நடமாட ஒரு வருடம் ஆகியது. பிறகு நான் என் வீட்டிற்கு செல்லவில்லை. தனிமை தேவைபட்டதால் இங்கே வந்து விட்டேன். இதை ஒரு வெளிநாட்டுகாரரிடம் இருந்து வாங்கினேன். கங்காதரனிடம் மட்டும் பேசுவேன். நீ பிறகு அதிதியை தேடிப்போக ஆரம்பித்தாய்."
"என்னை நம்பு… இப்போதைக்கு அதிதிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தந்து விட்டேன். உனக்கும்…."
இருளில் இருந்து மெல்லிய கரம் நீண்டது. தரையில் நீர் தொட்டு எதையோ எழுதியது.
"நன்றி…"
"என்னை மன்னித்து விடம்மா.."
ஒரு வேகத்துடன் அந்த கை அசைத்து மறுத்தது. மீண்டும் எழுதியது.