டீபாயின் மீது இருந்த லட்டு பட்டது
'உடைந்து இருக்கிறது பாதி போர்சனை காணவில்லை.. அவள் சாப்பிட்டு விட்டாளோ… அப்படினா இன்னேரம் மயங்கி இருக்க வேண்டுமே… இவள் தெளிவாக இருக்கிறாளே' குழம்பினான்.
"அதிதி…" மெல்ல அழைத்தான்.
திரும்பி பார்த்தவள்.. பழிப்பு காட்டி முக்ம் திருப்பினாள்.
செல்ல கோபம்! இதுவரைக்கும் அவள் இப்படி நடந்து கொண்டதில்லை.. சம்திங் ராங்…!
"என்னாச்சு" வினவினான்…
திரும்பாமலேயே கழுத்தை நொடித்தாள்.
'ரொம்ப ஓவரா போகுதே..!. ஓருவேளை மயக்க மருந்து வேற மாதிரி வேலை செய்யுதா…?
"அதிதி… என்னாச்சு… என்ன கோபம்? நான் என்ன செஞ்சேன்"
அவள் திரும்பி தலையை சரித்து பார்த்தாள்.
"இப்படி பார்த்தால் எனக்கு புரியலை"
அவள் பார்வையில் ஏதோ மாற்றம்… என்னவென்று அவனுக்கு புரியவில்ல..
என்னாச்சு?... வாட் ஹாப்பண்ட் ... க்யாஹூவா..?.. செ க்யூ சே பாஸ்..?...
குழப்பமாகவும் மௌனமாகவும் கடந்த சில நொடிகளின் முடிவில்… அதிதி வாயை திறந்தாள்…
"டாடி…."
டாடியா…? அச்சோடா… என்னைப்போய் டாடிங்கறாளோ...
"என்ன..??????" அதிரதனின் அதிர்ச்சியை கவனிக்காமல் அவள் பேசினாள்…
"நீங்க எங்க போனீங்க?.. அம்மாவையும் காணாம்… அபிக்கா எங்கே?"
அங்கே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்.
நாஸ்டால்ஜிக் எஃபெக்ட்… அவள் எடுத்துக் கொண்ட மருந்து பழைய நினைவுகளை கிளப்பி விட்டது.
அதிதியின் மனதில் தந்தையை பிரிந்த ஏக்கம் இருக்கிறது. அவளுடைய அப்பா இறந்து பேனாலும் ஆழ் மனது அதை ஏற்று கொள்ளவில்லை… அதிரதனை இப்போது தந்தையாக பார்க்கிறது…
அஞ்சலையின் மருந்தின் விளைவு!.
ஓகே… அவள் இரத்தத்தில் என்ன மருந்து கலந்து இருக்கிறது என்பதை. தெரிநது கொண்டால் துளசி அத்தைக்கு என்ன நடந்தது என்பதை நிருபிக்கலாம்.
அதிதியின் இரத்த மாதிரியை எடுக்க வேண்டும். அதற்கு அவள் போக்கிலேயே போய்