தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்
அதிரதன் மனதிற்கு சரியாக தோன்றவில்லை. அதிதிக்கு ஏதோ சிக்கல். அவளை தனியாக விட்டு வந்தது தவறு. அந்த அஞ்சலைக்கு வாய்ப்பு தந்திருக்க கூடாது….
வண்டியில் விரைவாக தாதிபட்டிக்கு சென்றபோது.. சம்பத் வழியில் கை நீட்டி மறித்தான். வண்டியே அவனுடையதுதான்.. எனவே ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.
"மாப்பிள்ளை.. அதுக்குள்ள டவுனுக்கு போயிட்டு வந்திட்டீங்க."
"இல்லை.. நான் டவுனுக்கு போகவில்லை. முக்கியமான விஷயம்.. சீக்கிரமா வீட்டுக்கு போகணும். அதான் திரும்பிட்டேன்."
"ஓ… சரி வாங்க போகலாம்" என்றபடி அவனும் வண்டியில் ஏறிக்கொண்டான்.
அவர்கள் அதிதியின் வீட்டை நெருங்கிய போது… சிவப்பு ஜெர்கின் அணிந்த ஒருவன் விரைவாக நடந்து செல்வதை பார்த்தான். அவன் அதிதி வீட்டு வாசலில் காலை வைக்கவும்.. அதிரதன் வண்டியை அங்கு கொண்டு நிறுத்தவும் சரியாக இருந்தது.
"ஏய்.. யார் நீ.. இங்க என்ன செய்ற. மாப்பிள்ளை இவன் யாரணு தெரியலை.. புதுசா இருக்கான்.." என்று சம்பத் கத்த ஆரம்பித்தான்.
அவனுடைய குரலை கேட்டு பதறியவனாக ஜெர்கின் அணிந்தவன் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான்.
"நில்லுடா" என்று குரல் தந்தபடி சம்பத் அவனை தொடர,
'அவன் மருதுவின் தம்பியாக இருக்குமோ' என்ற சந்தேகம் தோன்ற அதிரதனும் அவனை நோக்கி விரைந்தான்.
ஜெர்கின் அணிந்தவன் ஓட ஆரம்பித்தான். உடனே சம்பத் அவனை நோக்கி ஓடியபடி,
"மாப்பிள்ளை… அவனை நான் பிடிச்சிட்டு வரேன். நீங்க போங்க" என்றான்.
"விட்டுறதீங்க சம்பத்.. அவன் கிட்ட விசாரிக்கணும். ரொம்ப முக்கியம்… வீட்டுக்கு கூட்டிட்டு வத்துடுங்க "
அந்த மருது சொன்ன மய்க்க மருந்து விசயம் அதிதியை பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் அதிரதனும் வீட்டை நோக்கி விரைந்தான்.
ஒருவித பதட்டத்துடன் கதவை தட்டினான். சில நொடிகள் தாமத்தித்து அதிதி கதவை திறந்தாள். அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் திரும்பி சென்றாள்.
அவளை கூர்ந்து கவனித்தபடி பின்னேயே சென்றவன் குழம்பினான்.
ஏனெனில் அதிதி விரைப்பாக முகத்தை வைத்தபடி அவனுக்கு எதிராக முகத்தை திருப்பியவளாக சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
'கோபமாக இருக்கிறாளோ… அவளுக்கு என்ன ஆச்சு' கேள்வியாக பார்த்தவன் கண்ணில்