தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 24 - ராசு
காரை ஓட்டிக் கொண்டிருந்த இளங்கனியனுக்கு மனம் ஓரிடத்தில் இல்லை. இப்போதும் கூட அவனால் அமுதநிலா அவன் மார்பில் சாய்ந்து அழுததை உணர முடிகிறது.
கடைசி வரையில் ஏன் அழுதேன் என்று அவள் சொல்லவில்லை. அவன் கிளம்பும்போது கூட அவனை வழியனுப்ப என்று அவள் வெளியில் வரவில்லை.
அவன் மார்பில் சரிந்து அழுதவளைத் தேற்றுவதறியாமல் அவன் திகைத்து நின்றது என்னவோ உண்மைதான்.
ஆனாலும் அவள் அழட்டும் என்று அவள் தேறும் வரை காத்திருந்தான். அவள் மனதில் உள்ள வருத்தமெல்லாம் தீருமட்டும் அழட்டும் என்றுதான் அவளை அழவிட்டான். அதன் பின்னர்தான் தான் செய்தது அவளுக்குப் புரிந்தத ... சொல்லாமல் பார்த்துக்கிட்டிருக்கே
This story is now available on Chillzee KiMo.
...
"அவள் உங்களைக் காதலிக்கிறாள்னு நினைக்கிறேன் மாமா."
அவள் சொன்னதைக் கேட்டதும் அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.