அவங்களுக்கு ஏமாற்றமா இருக்கும்!"
" நல்ல காரியம் செஞ்சிருக்கே, ரஞ்சித்! அதுசரி, அக்கா விசாரிக்கச் சொன்னாங்களே, தம்பி இருக்கிற இடத்தை, விசாரிச்சியா?"
" அதை சொல்ல மறந்துட்டேனே, உன் தம்பி இப்ப இருக்குமிடம் தெரிஞ்சுபோச்சு! உங்க அப்பா - அம்மா கரெக்டாதான் ஊகிச்சிருக்காங்க, அவன் அந்தப் பொண்ணு வீட்டிலேதான் தங்கியிருக்கான், ஒருவேளை, அவங்க ரெண்டுபேருக்குள்ளே ஆரம்பத்திலேயே தொடர்பு இருந்திருக்குமோ என்னவோ!"
"ஓ! அப்படின்னா, அவன், பெற்றவங்களை தேடி அலையலே, பார்க்கலைங்கிற நல்ல விஷயத்தை அக்காவுக்கு சொல்லிடறேன்!"
" இரு, அவசரப்படாதே! உன் தம்பி அந்த இடத்திலே ரொம்பநாள் தங்கமுடியாது, அந்தப் பொண்ணுக்கு ஏற்கெனவே வேற ஒருத்தனோட கல்யாணமாகி அவங்களுக்கு ரெண்டு பெண்களும் இருக்காங்களாம்!"
" அப்படியா! அப்படின்னா, அவ புருஷன் எப்படி, அந்த வீட்டிலே, என் தம்பி இருக்கிறதை அனுமதிச்சான்? த்தூ! வெட்கங்கெட்டவங்க!"
" இதைத்தான் பெண்புத்தின்னு சொல்றது! அவசரமா, ஒரு பொண்ணோட, மானத்தையே காறித் துப்பிட்டியே, உண்மை என்ன தெரியுமா?"
" சொன்னால்தானே தெரியும்!"
" இப்ப அவ புருஷன் அவளோட வாழலே!"
" இன்னும் நல்லதாப் போச்சு, அவளுக்கு! ரெண்டு பெட்டைப் புள்ளைங்க வேறே! என் தம்பி ரௌடிங்கறது, வெட்ட வெளிச்சமாயிடுத்து!"
" இன்னமும் ஏன், அவனை, உன்னை அறியாமலேயே, 'என் தம்பி'ன்னு சொந்தம் கொண்டாடறே?"
"ஆமாம், ரஞ்சித்! தப்புத்தான்! அந்த பொறுக்கியை என் தம்பின்னு உறவு கொண்டாடற இந்த வாயை பினாயில் போட்டு கொப்பளிச்சாக்கூட, போகாது குமட்டல்!"
" உன்னை திருத்தவே முடியாது! அவசரப்படாதேன்னு நான் சொல்றதை காதிலேயே வாங்கிக்காம, பேசிண்டே போறியே!
மேற்கொண்டு விசாரிக்கச் சொல்லியிருக்கேன், அங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சபிறகு, முடிவு எடு!
அது சரி, 'அக்கா' 'சொக்கா'ன்னு பாசத்திலே உருகுறியே, அந்த 'சொக்கா'க்கள் ஷகீலாவும் நிர்மலாவும் உனக்குத் தெரியாம, ரகசியமா, என்ன பண்ணியிருக்காங்க, தெரியுமா?"