(Reading time: 17 - 33 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 08 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

"பாட்டி பார்த்து போயிட்டு வாங்க. நீங்க இல்லாம எனக்கு தான் ரொம்ப போர் அடிக்கும்" விசாலத்தின் கைகளை பிடித்தபடி அவரோடு வெளியே வந்த தமிழ்செல்வி அழாத குறையாக புலம்பி கொண்டிருக்க, "ஹ்ம்ம் எனக்கு தெரியாதா இந்த புதுசா கல்யாணம் ஆனவர்களை பத்தி!!! எப்படா கெளம்புவாங்கனு மனசுல திட்டிட்டே வெளியே "ஐயோ உங்களை மிஸ் பண்றோம் பாட்டி" னு அழுது டிராமா பண்றது" என்று சிரித்தார் விசாலம்.

"பாட்டி.... ஆனாலும் இப்போ எல்லாம் நீங்க ரொம்ப தான் என்னை கிண்டல் பண்றீங்க. நான் எல்லாம் அந்த மாதிரி கிடையாது" என முகத்தை தூக்கி வைத்து கொண்டாள் தமிழ்செல்வி.

"நீ அந்த மாதிரி இல்லைனா என்ன என் பேரன் அந்த மாதிரி தான். பாரு, எவ்ளோ ஸ்பீடா என்னோட லக்கேஜை கார்ல ஏத்திருக்கான். போகவேண்டாம் பாட்டினு ஒரு வார்த்தை சொன்னானா?  இதான் இந்த காலத்து பசங்களோட பாசம்...ஹ்கும்" என பெருமூச்சு விட்டார் விசாலம்.

"நீ அசோக் கிளினிக் போறேன்னு சொன்னதும் என்கிட்டே என்ன குதி குதிச்சான் தெரியுமா? என்னமோ நான் தான் உன்னை போக சொல்லி பிளான் பண்ணா மாதிரி சாமியாடுனாண். என்ன மந்திரம் போட்டியோ...என்னையே ஒரு டம்மி டைரக்டரா வெச்சுருந்தவன் இப்போ உன்னை டைரக்டர் ஆக்குனது இல்லாம அவன் ஆபீஸ் போகும்போது உன்னையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கான். கெட்டிகாரி" என அவளின் கன்னத்தை கிள்ளியவர் கார் அருகே வந்ததும் பேச்சை ராமின் புறம் திருப்பினார்.

"பாட்டி லக்கேஜ் எல்லாம் எடுத்து வெச்சுட்டேன். பார்த்து போங்க, போனதும் எனக்கு கால் பண்ணுங்க" என பேசி கொண்டே போனவனை இடைமறித்தவர் "அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ செல்வியை நல்லா பார்த்துக்கோ.பரத்தும் இலக்கியாவும் அங்க போனதும் கால் பண்றதா சொல்லிருக்காங்க., நீங்க ரெண்டு பெரும் மட்டும் தான். சோ உன் கோவத்தை எல்லாம் அவ கிட்ட காட்டிடாதே"என்றவர் காரில் ஏறி அமர்ந்தார். கார் வாசலை தாண்டி வெளியே செல்லும் வரை பார்த்து கொண்டிருந்த தமிழ்செல்வி, உள்ளே செல்ல திரும்ப, வாசலில் கைகளை கட்டியபடி அவளை பார்த்து கொண்டிருந்தான் ராம்.

அவனை பார்த்தும் பார்க்காததும் போல கடந்து செல்ல போனவள் கையை பிடித்தவன் அவளை இழுத்து முன்னால் நிறுத்தினான்.  அவன் இழுத்த வேகத்திலும் அவனின் இறுகிய பிடியிலும் அவளின் முகம் கோவத்தில் சிவந்தது.

"எதுக்கு இப்படி பிடிச்சு இழுக்கறீங்க?" என்றபடி அவனின் பிடியில் இருந்து விலக முயல,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.