(Reading time: 12 - 23 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அவள் எங்கிருந்து வந்தாள் என்று பல வினாக்கள் எழும்ப எந்த வினாக்களுக்கும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் பூங்குழலியும் யோசித்துக் கொண்டிருந்தாள். இயல்பாகவே பூங்குழலி என்று சொல்ல வேண்டியதை தவறாக உச்சரித்தாலே அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இன்று அவன் குயிலி என்று சொன்ன போது நான் ஏன் உனக்கு பதிலுக்கு அவ்வாறு நடந்து கொண்டேன்.

 குயிலி என்று எனக்கு யாரையும் தெரியாது. இந்த குயில் யார்... நான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டேன் என்று யோசித்துக்கொண்டே உறங்கியும் போனாள்.

மும்பை....

சாரங்கன் பாஸ் சொன்ன வேலையை முடித்துவிட்டு அவன் கேட்டது போல தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளை லிஸ்ட் போட்டு கொடுத்தான்.

தூத்துக்குடி மணப்பாடு உவரி காயல் பட்டினம்² திருச்செந்தூர் குலசை என்று பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

அதை வாங்கிப் பார்த்த பாஸ் அதை வாட்ஸ் ஆப்பில் அனுப்பினான். பிறகு யாருக்கோ அழைத்து டேய் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஃபேமிலிய போட்டு ஒழுங்கா வேலையை பாரு என்று சொல்லி விட்டு பிற‌ வேலைகளை பார்க்க சென்றான் பாஸ்.

இரண்டு நாட்கள் கழித்து ஒவ்வொரு ஏரியாவிலும் ஆட்கள் செட் செய்து விட்டேன் என்று மெசேஜ் வர அந்த நம்பருக்கு அழைத்தான் பாஸ்.

சொல்லுங்க சார்...

அங்கேயே தங்கி வேலை செய்கிற மாதிரி ரெடி பண்ணி விட்டாயா..

ஆமா...பண்ணிட்டேன்.

புன்னக்காயல் என்று ஒரு ஏரியா இருக்கு. அதை பற்றி நீ எந்த டீடெயில்ஸ்ம் அனுப்பவில்லை ‌.

சார்.. நீங்க அனுப்பிய லிஸ்டில் இப்போ சொன்ன ஊர் இல்லையே...

ஒழுங்கா பாரு‌.‌.சீக்கிரம் அந்த ஏரியாவில் ஆளை போடு‌ என்று துண்டிக்க புன்னக்காயல் நோக்கி பயணம் மேற்கொண்டது ஒரு குடும்பம்.

தொடரும் 

Go to Unakkaagave uyir vazhgiren story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.