தொடர்கதை - பிரியமானவளே - 13 - அமுதினி
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
"சார் இதுல நியூ ப்ரோபோசல்ஸ் எல்லாம் டாக்குமெண்ட் பண்ணிருக்கு. மேம் இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க. இதுல ஏதாவது சேஞ்சஸ் இருந்தா மீட்டிங்கில் டிஸ்கஸ் பண்ணலாம்னு சொன்னாங்க" என்றபடி கையில் இருந்த டாக்குமெண்ட்டை நீட்டிய கீர்த்தியை பார்த்த ராம், அந்த டாக்குமெண்ட்டை கையில் வாங்கி கொண்டான்.
"தமிழ் எங்க? " என்றவனுக்கு, அவள் அடுத்த மீட்டிங்கிற்கான குறிப்புகளை தயார் செய்வதில் பிசியாக இருப்பதாக பதில் சொல்லிவிட்டு கீர்த்தி வெளியேற, ராம் யோசனையுடன் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
கடந்த ஒரு வாரமாக அவள் இப்படி தான் அவனுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறாள். வீட்டிற்கு சென்றால் பாட்டியுடன் இருப்பவள், அவன் வரும் முன் அறைக்கு சென்று உறங்கி விடுகிறாள். உறங்குகிறாளா இல்லை உறங்குவதை போல நடிக்கிறாளா என தெரியவில்லை. அலுவலகத்திற்கு வரும் போது நித்யாவும் அவர்களுடன் வருவதால் அப்போதும் அமைதியாகவே வருவாள். அலுவலகத்திலும் அவனை நான்கு பேர் சுற்றி இருக்கும் மீட்டிங்கில் மட்டுமே சந்தித்தாள். எத்தனை நாட்கள் தான் இப்படி கண்ணாமூச்சி ஆடுவாள் என பார்ப்போம் என்று தான் நினைத்தான் ராம். ஆனால் இதற்க்கு மேல் பொறுமையாக இருக்கமுடியாது என்று எண்ணியவன் எழுந்து அவளுடைய அறையை நோக்கி சென்றான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு "கம் இன் " என்ற தமிழ்செல்வி, "கீர்த்தி, ப்ரோபோசல்ஸ் எல்லாம் கொடுத்துட்டியா???" என்றபடி நிமிர்ந்தவள் அங்கு ராமை எதிர்பார்த்திருக்கவில்லை.
தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து நின்றவளை பார்த்தபடி வந்தவன் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தான்.
"எ...என்ன விஷயமா வந்துருக்கீங்க? ஏதாவது மீட்டிங் இருக்கா?" தன்னை நிதானப்படுத்தி கொண்டு கேட்டாள் தமிழ்செல்வி.
எதுவுமே பேசாமல் அவளையே அவன் பார்த்த படி அமர்ந்திருக்க, அவன் ஏன் இப்படி பார்க்கிறான் என புரியாமல் விழித்தாள் தமிழ்.
"கீர்த்தி கிட்ட ப்ரோபோசல்ஸ் கொடுக்க சொல்லியிருந்தேன். அவ கொடுக்கலையா? நான் கூப்டு கேக்கறேன்" என்றபடி தன்னுடைய செல்பேசியை கையில் எடுத்த தமிழிடம் இருந்து அதை பிடுங்கியவன், அவளுக்கு அருகே வந்து மேஜையில் கையை ஊன்றியபடி நின்றான்.
"நான் ப்ரோபோசலை உன்கிட்ட கேட்டேன். நான் உன்கிட்ட கேட்டா அதை நீ தான் கொண்டு வந்து தரணும். அது தான் ஒரு சிஇஓ க்கு கொடுக்கற மரியாதை. புரியுதா?" அவன் ஒவ்வொரு