தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 08 - முகில் தினகரன்
மறுநாள் மாலை அலுவலகம் முடிந்த பின், தோழி சவிதாவுடன் அந்த ரெஸ்டாரெண்டிற்கு காஃபி சாப்பிட சென்ற அர்ச்சனா அவளிடம் தன் மனப் புழுங்கல்களை கொட்டித் தீர்த்தாள்.
“என்னுடைய அந்தச் செயல் யாரை சந்தோஷப்படுத்துமோ இல்லையோ...நிச்சயம் என் அக்காவைச் சந்தோஷப்படுத்தும்னு நம்பினேன்!...ஆனா அது அவளை மேலும் நோகடிக்கும்னு சத்தியமா நெனைக்கவேயில்லை!....ச்சே!...என்னோட அவசரப்புத்தி அவளை இன்னும் அதிகமாய்ச் சங்கடப்படுத்தி விட்டது!...காயப்படுத்தி விட்டது” சொல்லும் போது அர்ச்சனாவின் முகத்தில் வேதனை ரேகைகள் ஓடின.
“ம்ம்..யோசிச்சுப் பார்த்தா...உங்க அக்காவோட கோணமும் சரின்னுதான் படுது!... “அவ அழகுல கொஞ்சம் மட்டுதான்!...அதனாலதான் மாப்பிள்ளை அவளை ஒதுக்கிட்டு என்னையக் கேட்கிறார்!”ங்கற சங்கடமான உண்மையை நீ...உன்னோட அதிரடியான மறுத்தல் மூலமா உரக்கச் சொல்லி...போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிட்ட மாதிரித் தெரியுது!” சவிதா தெளிவாய்ச் சொன்னாள்.
“ஏய்...சவிதா!...நேத்திக்கு நீதாண்டி இந்த ஐடியாவை எனக்குச் சொல்லிக் குடுத்து...என்னைய கொம்பு சீவி அனுப்பி வெச்சே?...இப்ப நீயே வேற மாதிரிப் பேசினா எப்படிடி?”
“உண்மைதான்...நான் மறுக்கலை!...பட்...இந்த கோணத்துல சிந்திக்க ஏனோ எனக்கும் தோணலை!” அவளும் தன் தவறை ஒப்புக் கொண்டாள்.
“மொத்தத்துல தேவையில்லாம எல்லோர் மனசையும் சங்கடப்படுத்தி...எல்லோருக்கும் கெட்டவளாயிட்டேன் நான்!” பரிதாபமாய்ச் சொன்னாள் அர்ச்சனா.
அப்போது,
“எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற குரல் வெகு சமீபத்தில் கேட்க, இருவரும் ஒரு சேர தலை நிமிர்ந்து பார்த்தனர்.
“நான்...இங்க உட்காரலாமா?” என்று அப்பெண் இவர்கள் மேஜையில் காலியாயிருந்த இருக்கையைக் காட்ட,
“ம்...உட்காரலாமே!” என்றாள் அர்ச்சனா.
“தேங்க் யூ!” என்றபடி அமர்ந்த அப்பெண், தன் கையிலிருந்த பேக்கை மேஜை மீது வைத்து விட்டு, “என் பேரு...மைதிலி!...நான் நேத்திக்கு நீங்க வந்து சண்டை போட்டுட்டு வந்தீங்களே?...அதே பேங்க்லதான்...வொர்க் பண்ணறேன்!...மிஸ்டர்.பிரபாகரோட கொலீக்!” என்றாள் நாகரீகமான குரலில்.
அவள் அப்படிச் சொன்னதும், “போச்சுடா!...நேத்திக்கு நான் செஞ்ச காரியத்துக்கு என்னை அர்ச்சனை பண்ண இன்னொரு ஜீவனும் புறப்பட்டு வந்திருக்கு போலிருக்கே!” என்று நினைத்துக்