தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 16 - பிந்து வினோத்
ஒன்றிரண்டு வினாடிகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் சுவாதியின் அருகே வந்த விஷ்ணுப்ரியா,
“அண்ணி, என்னை மன்னிச்சிருங்க...” என்றாள். அவளின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன.
“அண்ணின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்...” என சொல்லத் தொடங்கிய சுவாதி, விஷ்ணுப்ப்ரியாவின் கண்ணீர் துளிகளை பார்த்து விட்டு,
“அழாதீங்க” என்றாள்... மேலே என்ன சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
“அன்னைக்கு எனக்கு விபரம் போதலை... உங்களைப் பத்தி தப்பா நினைச்சு அப்படி எல்லாம் பேசிட்டேன்... சாரி அண்ணி!”<
...
This story is now available on Chillzee KiMo.
...
யா தயக்கத்துடன் மேலே சொல்ல, சுவாதி அவளை கேள்வியாகப் பார்த்தாள்.
“அம்மாவும் சரி, நானும் சரி, எங்க தப்பை உணர்ந்துட்டோம். ஆனால் அதை அண்ணா கிட்ட சொல்ல தைரியம் வர மாட்டேங்குது...”