ஃபைலை தேடிக் கண்டுப்பிடிச்சு, படிச்சுட்டு எனக்கு சொல்லு.”
“எனக்கு பயமில்லை சத்யாக்கா. நீங்க ஏதாவது வம்புல மாட்டிக்கப் போறீங்க. அப்புறம் தேன் சார் என்னை கேவலமா திட்டுவார்.”
“உன்னை மட்டுமா திட்டுவார்? என்னையும் சேர்த்து தான் திட்டுவார். அதெல்லாம் பார்த்தா ஒன்னும் செய்ய முடியாது. நீ என்ன இப்படி தொட்டாசிணுங்கியா இருக்க? திட்டை எல்லாம் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுப் பழகு.”
“நான் ஒன்னும் தொட்டாசிணுங்கி எல்லாம் இல்லை. தேன் சார்......”
“டேய் தம்பி சும்மா புலம்பாதே! நான் தானே கேட்குறேன். அப்படியே அவர் கேட்டாலும் அக்கா மிரட்டிக் கேட்டாங்கன்னு என் மேல பழியை தூக்கி போட்டுடு. அவர் கத்துறது, திட்டுறது எல்லாம் எனக்கு சுப்ரபாதம் போல. அப்படியே கேட்க கேட்க காதுல தேனா ஓடும்!”
“விளையாடாதீங்க அக்கா. உங்களுக்காக நான் கேஸ் ஃபைலை எடுத்துப் பார்த்து சொல்றேன். ஆனால் நீங்க அதை கேட்டுட்டு அப்படியே மறந்திடனும். சரியா?”
“முயற்சி செய்றேன். நீ முதல்ல ஃபைலை கண்டுப்பிடி.”
அபினவ் அரை மனதுடன் சரியென தலை ஆட்டினான்!
🌼🌸❀✿🌷
மறுநாள்.
சத்யா சக்தியை தேடி பர்வதம் பாட்டி வீட்டிற்குச் சென்றாள்.
மற்ற நாட்களைப் போல ஏதோ மூலையில் இருக்காமல் சக்தி பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள்.