(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“என்ன சக்தி, தோட்டத்தை கிண்டாம பாட்டி பக்கத்துல இருக்கீங்க?” என ஆச்சர்யம் மின்ன வினவினாள் சத்யா.

  

“சும்மா பேசிட்டு இருந்தேன் சத்யா!”

  

“உன் ஃபிரென்ட் ராஜாவை பத்தி கேட்டுட்டு இருந்தா!”

  

சக்தியும், பாட்டியும் ஒரே நேரத்தில் பதில் சொன்னார்கள்.

  

பாட்டியின் பதில் சத்யாவை ஆச்சர்யப் படுத்தியது. சக்தியை அப்படியா என்றுப் பார்த்தாள்.

  

“நான் சத்யா கிட்ட பேசிட்டு வரேன் பாட்டி,” என்று சொல்லி விட்டு சத்யாவிடம் வந்த சக்தி,

  

“சும்மா போரடிச்சுது சத்யா,” என்று விளக்கம் கொடுத்தாள்.

  

“எனக்கு கல்யாணம் ஆகி பன்னிரெண்டு வருஷமாச்சு சக்தி. இதுல நான் தெரிஞ்சுக் கிட்ட ஒன்னு, போலீஸ்காரங்க சும்மா எதையும் செய்ய மாட்டாங்கன்றது!”

  

கொஞ்சம் யோசித்து விட்டு உண்மையை சொன்னாள் சக்தி.

  

“உங்க கிட்ட சொல்றதுல ஒன்னும் இல்லை சத்யா. நான் பெட்ரூமா யூஸ் செய்ற ரூமுல ஒரு பழைய நோட்புக் கிடைச்சது.”

  

“நோட்புக்கா?”

  

“ஆமா. புக் உள்ளே ஒரே கவிதைங்க!”

  

“கவிதையா?”

  

“இயற்கையை வர்ணிச்சு, ஊக்கப் படுத்துற மாதிரி அப்புறம் கொஞ்சம் காதல் கவிதைங்க.”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.