வேண்டியது இதுதானே ஆம்பளைங்க புத்தி”
“ஷ் தெரியாம உன்வாயில விழுந்து எழுந்தேன், இதோட நிப்பாட்டிக்க என்னால முடியலை”
”சரி நிப்பாட்டறேன் 20 லட்சத்தை எப்ப தர்ற எப்படி தருவ அதை சொல்லு முதல்ல”
”இப்படி அவசரப்பட்டா எப்படி நான் என்ன 20 லட்சத்தை என் பாக்கெட்லயா வைச்சிக்கிட்டு அலையறேன் பொறும்மா”
”எங்க சொத்தை விட 3 மடங்கு சொத்துள்ளவங்கதானே நீங்க, இந்த 20 லட்சம்லாம் உங்களுக்கு பெரிய தொகையே கிடையாதே”
”வாஸ்தவம்தான் ஆனாலும்” என இழுத்தான்
”என்ன இழுக்கற என்னாச்சி“
”எப்படி இந்த பணத்தை அப்பாகிட்ட கேட்கறதுன்னு யோசனையா இருக்கு, அவங்க என்ன நினைப்பாங்க தப்பா நினைப்பாங்களே, எனக்கு கேட்கவே கூச்சமா இருக்கு”
”அதுக்குதான் நான் சொல்றேன் உன் பங்கு சொத்தை பிரிச்சி கொண்டு வா போதும்”
”அதெல்லாம் முடியாது உனக்கென்ன 20 லட்சம்தானே வேணும்“
”ஆமாம்”
”ஏற்பாடு செய்றேன்”
”அதான் எப்படி”
”எப்படியோ செய்றேன் விடேன்” என பொங்கி எழுந்தவன் கணக்குபிள்ளையை அழைத்துக் கொண்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினான்