தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 06 - சசிரேகா
காவேரி மீதிருந்த பயத்தில் ஓடி வந்து கிணற்றடியில் சேர்ந்தார்கள் இருவரும், கைஅலம்பி விட்டு கொம்பன் கணக்குபிள்ளையிடம்
”சரிடா நேரத்தோட போய் வந்துடு இல்லைன்னா அதுக்கும் உன்னை குத்தம் சொல்வாங்க”
”இதோ கிளம்பிட்டேன்“
”டேய் முன்வாசல் வழியா போகாத, அங்க என் மாமன் இருக்கான் இதோ இப்படியே சுத்திக்கிட்டு போய் வா, அந்த ராட்சஸி கண்ல மட்டும் பட்டு வைக்காத” என சொல்லிய நேரம் காவேரி வந்தாள்
”யாரும் எங்கயும் போககூடாது” என்றாள் கோபமாக
”யாரும் எங்கயும் போகலையே“ என்றான் கொம்பன் இயல்பாக
“பொய்யா சொல்ற இப்பதானே எங்கயோ போற மாதிரி ரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்க எங்க போகப் போறீங்க”
”நான் எங்கயும் போகலையே நான் போய் ஓய்வெடுக்கறேன்” என சொல்லிய கொம்பன் வீட்டிற்குள் சென்றுவிட தனியாக மாட்டிக் கொண்ட கணக்குபிள்ளையை பிடித்தாள் காவேரி
”உண்மையை சொல்லு நீ எங்க போகப் போற”
“சாப்பிட்டது ஜீரணமாகலை அதான் அப்படியே நடந்து போய் வரலாம்னு”
”எதுவரைக்கும் நடக்கப் போற”
”இங்கதான் பக்கத்தில கொம்பன் வீடுவரைக்கும்”
”ஓஹோ அந்த வீட்டுக்குப் போறியா”