மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 32 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“இந்த பேகை இங்கே வைக்கட்டுமா?” சத்யா ட்ராவல் பேகை கையில் பிடித்துக் கொண்டு அஹல்யாவிடம் கேட்டாள்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே பார்த்துக்குறேன்,” என்றாள் அஹல்யா பதற்றத்துடன்.
“இதுல என்ன பெரிய சிரமம் இருக்கு? ஒரே ஒரு பேக் மட்டும் தானே? நீங்க எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு இருங்க, நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்.”
அஹல்யா வேண்டாம் என்று சொல்ல நினைக்க தொடங்கும் போதே, சத்யா அவளுடைய கையிலிருந்த மொபைலை பக்கத்திலிருந்த மேஜை மீது வைத்து விட்டு, அங்கே இருந்து போயிருந்தாள்.
“அவ்வளவு தான் அஹல்யா, எல்லாம் எடுத்தாச்சு.” அபினவ் அருணை கையில் தூக்கி கொண்டு உள்ளே வந்தான்.
“நீங்க சொன்னது நிஜம். சத்யா ரொம்ப நல்லவங்க,” என்றாள் அஹல்யா.
“அவங்க மட்டும் இல்லை அஹல்யா, தேன் சாரும் ரொம்ப நல்லவர். உன் எதிர் வீட்டுக்காரங்க தொல்லையால அந்த பழைய கேஸ்க்கு அவர் மேல பயங்கர ப்ரெஷர். அவர் எப்படியும் உண்மையை கண்டுப்பிடிச்சிடுவார்.”
“எனக்கு பயமா இருக்கு அபி.”
“பயப்பட எதுவுமில்லை அஹல்யா. தப்பே செய்யாதப்போ, எதுக்கு பயப்படனும்? நீ தைரியமா இரு. பாரு, அருண் உன்னால எப்படி இருக்கான்னு!”
இருவரும் ஒரே நேரத்தில் அருணைப் பார்த்தார்கள். அருண் அப்பாவித்தனத்துடன் சிரித்தான். அஹல்யா, அபினவ், இருவருக்குமே ஆறுதலாக இருந்தது.
“அருண், சீசர் சங்கிலியைப் போடு. நாம அவனை வாக் கூட்டிட்டுப் போவோம்,” என சொல்லி