(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

தொடர்கதை - சின்ன மருமகள் - 02 - சசிரேகா

ஜானகி அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் மஹதி நேராக வேணியிடம் சென்றாள்

  

”வேணி ஆன்ட்டி“

  

”வா வா என்ன சொல்றா உன்னோட ப்ரெண்டு, எப்படியும் அவள் தப்புத்தப்பாதான் பேசியிருப்பா, அவள் பேச்சை நம்பாத, கொழுப்பெடுத்தவ நல்ல அருமையான வாழ்க்கை அமைஞ்சும் வாழாம விட்டேத்தியா திரியறா”

  

”ப்ச் ஆனா ஆன்ட்டி அவளுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ சொன்னா எப்படி, முதல்ல அவளுக்கு இந்த கல்யாணமே பிடிக்கலையாமே, எதுக்காக அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைச்சீங்க”

  

”இதப்பாரு மஹதி அவள் உன்கிட்ட என்னத்த சொன்னாள்ன்னு எனக்குத் தெரியாது, எப்படியிருந்தாலும் அவள் தன்னோட பக்கம் இருந்து பேசியிருப்பா, அதான் நீ இப்படி கேட்கற, உண்மையை சொன்னா சின்னப்ப இருந்தே வேங்கையனுக்குதான் ஜானகின்னு பேசி வைச்சாச்சி, அதுக்கு ஏத்த மாதிரி அவங்களும் இவளுக்கு செய்ய வேண்டிய சீர் வரிசைகளை செய்தாங்க, இது இந்த ஊருக்கே தெரியும்”

  

”ஆனா ஜானுவோட மனசுல மூர்த்திதானே இருக்காரு, அது உங்களுக்கு தெரியாதா என்ன”

  

”தெரியும் ஆனா வேங்கையன் அளவுக்கு மூர்த்தியால வரமுடியுமா என்ன”

  

”ஓ வசதி வாய்ப்பு சொல்றீங்களா”

  

”இரண்டு பேருக்குமே வசதி வாய்ப்பு அதிகம், யாரும் யாருக்கும் இளைச்சவங்க இல்லை”

  

”ஆனா விருப்பங்கறது வேற ஆச்சே ஆன்ட்டி, அவள் மனசுல மூர்த்தியிருக்கறப்ப நீங்க வேங்கையனுக்கு அவளை கல்யாணம் செய்து வைச்சது தப்புத்தானே”

  

”தப்புதான், என் பொண்ணை போய் வேங்கையன் போல ஒரு நல்லவனுக்கு கல்யாணம்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.