மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 33 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“சக்தி? பாட்டி?” சத்தமாக அழைத்துக் கொண்டே சத்யா வீட்டுக்குள் சென்றாள்.
அங்கே பாட்டிகள் மாநாடு நடப்பதாக தெரிந்தது!
பர்வதம் பாட்டியை தவிர இன்னும் ஏழு பெரியவர்கள் அங்கிருந்த ஷோஃபா, சேர்களில் அமர்ந்திருக்க, நடுவே சாந்ததுரை இருந்தான்.
“வெரி நைஸ் பாட்டி,” என்று எதைப் பற்றியோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
“சின்ன வயசுல பார்த்த அதே சிரிப்பு,” என்று ஒரு பாட்டி சொல்ல, பர்வதம் பாட்டி,
“பின்ன என் ராஜாவோட சிரிப்பு மாறிப் போகுமா,” என்றார்!
இதை எல்லாம் அதிசயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள் சத்யா.
“சத்யா!” மாடியில் இருந்து சக்தியின் குரல் ரகசியமாக சத்யாவை அழைத்தது.
சத்யா அண்ணாந்து பார்த்தாள். மாடிக்கு வா என்று கையால் ஜாடைக் காட்டினாள் சக்தி. பாட்டிகள் & சாந்ததுரையை இன்னும் ஒரு தடவை பார்த்து விட்டு மாடி ஏறிச் சென்றாள் சத்யா.
“என்ன சக்தி உங்க வீட்டு மாநாடு பத்தி என் கிட்ட நீ சொல்லவே இல்லை!?”
“கடுப்பேத்தாதே சத்யா. எர்லி மார்னிங் ஆரம்பிச்சது. சின்ன ப்ரேக் கூட இல்லாம போயிட்டே இருக்கு. நானே உன்னை பார்க்க வரலாம்னு ரெடி ஆயிட்டு இருந்தேன்.” சக்தியின் குரலிலும் கொஞ்சமாக எரிச்சல் கலந்திருந்தது!
சக்தி அணிந்திருந்த டீஷர்ட், ‘I am a woman. What’s your super power?’ என்றது. அதைக் கவனித்த சத்யா,