மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 36 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“அது தெரிஞ்சது தானே சக்தி! ஒருவேளை அருண் அப்பா பத்தின விஷயமா இருக்குமோ?” சத்யா யோசனையுடன் வினவினாள்!
“இருக்கலாம் சத்யா. ஆனால் என்னன்னு தெரியாம நாம அஹல்யாக்கு சப்போர்ட் செய்றது சரியான்னு எனக்கு கேள்வி வந்திருக்கு.” சக்தி வெகு சீரியசாக சொல்லவும், சத்யா அவள் பக்கம் பார்த்தாள்.
“எல்லோராலேயும் எல்லாத்தையும் எல்லோர் கிட்டேயும் பகிர்ந்துக்க முடியாது சக்தி. அஹல்யா அபினவ் கிட்ட சொல்லி இருக்காங்களே! அப்போ ஹார்ம்லஸ் ரீசன் தான் இருக்கும்!”
“இல்ல சத்யா! ஹர்ர்ம்லஸ் ன்னா அதை நம்ம கிட்டேயும் என்னன்னு சொல்ல வேண்டியது தானே? நாம அவங்களுக்கு ஹெல்ப் செய்ய தானே ட்ரை செய்றோம்?”
“இன்வெஸ்டிகேஷன் ஆஃபீசர் மாதிரி மட்டும் யோசிக்குற சக்தி! அஹல்யா பொறுத்த வரைக்கும் நாம விசாரிக்குறது எல்லாம் அவங்களுக்கு தெரியவே தெரியாது! அவங்களுக்கு நாம ஜெனரலா ஹெல்ப் செய்றோம்னு தான் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால், அபினவ் அஹல்யாக்கு ஸ்பெஷல். அதனால அவன் கிட்ட ஈஸியா சொல்லி இருக்காங்க. நம்ம கிட்ட சொல்லாம இருக்குறதுக்கு இன்னும் வேற ஆயிரம் காரணம் கூட இருக்கலாம். அபினவ் சொல்ற மாதிரி இந்த சேகரன் விஷயம் லோக்கல் மதியூர் கேஸ் தானே?”
“சரி, நீ சொல்றது கரக்ட்டுன்னே வச்சுப்போம். அஹல்யா மதியூர் வரதுக்கு முன்னாடி எங்கே இருந்தா?”
“மும்பைல!”
“மும்பையா? உனக்கு எப்படி தெரியும் சத்யா? அஹல்யா சொன்னாளா?”
“ஹுஹும்! நானே கண்டுப்பிடிச்சேன்.” சத்யா தன் மொபைலில் சேவ் செய்திருந்த அஹல்யாவின் பழைய டிரைவிங் லைசென்ஸை சக்தியிடம் காட்டினாள்.