தொடர்கதை - சின்ன மருமகள் - 05 - சசிரேகா
தோழிக்கு துரோகம் செய்கிறோமோ என நினைத்து உள்ளுக்குள் துடித்துப் போனாள் மஹதி, குற்ற உணர்வில் அவள் முகமே மாறிவிட்டது. அதைக்கண்ட ஜானகியோ அவளிடம்
”என்னடி உன் முகம் வெளுத்துடுச்சி, என்னாச்சி பயப்படறியா” என கேட்க உடனே மஹதி சமாளித்தாள்.
”ஆமாம் நாம ரொம்ப நேரமா இப்படி பேசிக்கிட்டு இருக்கறது, வெளிய இருக்கறவங்களுக்கு சந்தேகத்தை தந்துடுமோன்னு நினைச்சி பயமாயிருக்கு”
”ஆமாம்ல இப்ப என்ன செய்றது”
”வெளிய இருக்கறவங்க நம்பற மாதிரி நாம இப்ப நடிக்கனும்“
”என்ன செய்யனும்னு சொல்லு, நடிச்சி அசத்தறேன்”
”உண்மையிலயே நான் உனக்கு சக்களாத்தின்னு நினைச்சிக்க”
”சரி”
”என்னை இப்பவே இங்கிருந்து விரட்டற மாதிரி நடி போதும்“
”அவ்ளோதானே இப்ப பாரு” என சொல்லிய ஜானகி சட்டென கதவை திறந்துவிட்டு மஹதியின் பின்னங்கழுத்தில் கையை வைக்க அவளோ அதிர்ந்தாள்
”ஜானு என்ன செய்ற”
”ஷ்ஷ் இப்ப நான் ஜானு இல்லை“
”ஓ நீ நடிக்க ஆரம்பிச்சிட்டியா”