தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
40. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"என்ன அண்ணா சொல்றீங்க? உங்களுக்கு கல்யாணமா? என்கிட்டே சொல்லவே இல்லை???" கலா மனதில் தோன்றிய கேள்வியை வெளிப்படையாக சஞ்சீவிடமே கேட்டாள்!
"கலா, அதைப் பத்தி அப்புறம் பேசலாம்... இப்போ வா, நாம போய் கண்மணியோட கேசரிய பார்ப்போம்... தீய்ஞ்சுப் போயிடப் போகுது..." என சொல்லி கலாவை திசை திருப்பிய கீதா, அப்படியே கண்மணியிடம், "கண்மணி, நீ அவங்க இரண்டுப் பேருக்கும் குலாப் ஜாமுன் எடுத்து கொடு..." என்றும் சொல்லி விட்டு கலாவுடன் சென்றாள்!
"ஹப்பா!!! என்ன மாதிரியான ஃப்ரெண்ட்ஸ்ப்பா.... சான்சே இல்லை...."
சஞ்சீவின் கிண்டலை கவனிக்காதது போல் காண்பித்துக் கொண்டு, கண்மணி தந்த கிண்ணத்தை ஆர்வத்துடன் கையில் வாங்கினாள் இந்து!
"தேங்க்ஸ் கண்மணி... நான் குலாப் ஜாமுன் சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு..."
"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு சொல்றீங்க அக்கா... உங்களுக்காக தான் இன்னைக்கு ஸ்பெஷலா செஞ்சேன்னு நினைச்சுக்கோங்க..." பேசியபடி, வேறு ஒரு கிண்ணத்தில் குலாப் ஜாமுன் எடுத்து சஞ்சீவிடம் கொடுத்தாள் கண்மணி.
இந்து ஆவலுடன் கிண்ணத்தில் இருந்த ஜாமுனை ஸ்பூனில் பிய்த்து வாயில் வைத்துக் கொண்டே நிமிர்ந்துப் பார்த்தாள். அவளின் எதிரே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சஞ்சீவும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்! அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று இந்துவை என்னவோ செய்தது. அவசரமாக விழிகளை விலக்கிக் கொண்டு, மீண்டும் ஒரு சின்ன ஜாமுன் பீஸை எடுத்து வாயில் வைக்க போனவள், திகைத்து விழித்தாள்!
இப்போதும் சஞ்சீவின் பார்வை அவள் மீதே தான் இருந்தது. ஆனால், இப்போது அவனின் விழிகள் அவளின் உதடுகளில் பதிந்து இருந்தது... மென்று விழுங்கி விட்டு, ஸ்பூனில் எடுத்த ஜாமுனை வாயில் போடாமல், மீண்டும் கிண்ணத்தில் வைத்து விட்டு விழித்தாள் இந்து! சஞ்சீவ் இது எதிலும் சலனம் அடைந்ததாக தெரியவில்லை... அவன் கண்கள் இந்துவின் முகத்தையே இப்போதும் மொய்த்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் கண்மணி இருந்ததால்,