தொடர்கதை - பூவா? தலையா? - 10 - சசிரேகா
ஈஸ்வரமூர்த்தியின் இறப்பு கோவலனை உலுக்கிவிட்டது, அவன் துடித்துப் போனான். உதயமூர்த்திக்கும் வருத்தமாக இருந்தது, கண்கள் கலங்கிவிட்டார் மாதவியோ கண்கள் கலங்கி நின்றாள். உதயமூர்த்தி கோவலனிடம்
”இப்ப உனக்கு சந்தோஷமா நீ மட்டும் வந்திருந்தா என் நண்பன் உசுரை காப்பாத்தியிருக்கலாம் இப்படி செய்திட்டியே அப்படி என்னடா பெரிய காதல் உன்னோடது சே” என திட்ட அவனோ கலங்கியிருந்தான்.
”இப்பவாவது என்கூட வா உன் தாத்தாவுக்கு செய்ய வேண்டிய ஈமகாரியங்களை செய்யலாம் உன் கையால நீ கொள்ளி வைக்கனும், வா கோவலா போகலாம்” என அழைக்க கோவலனோ அதிர்ந்தான்
”நான் தனியா வரமாட்டேன்“
”அப்படின்னா”
”என்கூட மாதவியும் வருவா” என சொல்ல உதயமூர்த்திக்கு கோபமே எழுந்தது.
மாதவியோ அதிர்ந்து கோவலனிடம்
”நான் உங்களோட வரலை, நீங்க போங்க ப்ளீஸ்” என கெஞ்ச கோவலன் செல்ல மறுத்தான். அது மாதவிக்கு பெரும் கஷ்டத்தை தந்தது, உதயமூர்த்தியோ மாதவியை இளப்பமாகப் பார்த்து
”நீயும் ஒரு பொண்ணா” என சொல்ல அவள் துடித்துப் போனாள்
”இல்லை சார் கோவலன் செய்ற செயலுக்கு நான் காரணம் இல்லை, நானே அவரை விரட்டத்தான் பார்க்கிறேன், ஆனா அவர் என் பேச்சை கேட்கலை என்னை தப்பா நினைக்காதீங்க சார்” என சொல்ல உதயமூர்த்தி கோவலனிடம்
”எந்த மாதிரி சூழ்நிலையில எப்படி நடந்துக்கனும்னு உனக்கு தெரியாதா, கிளம்பு வா மாதவி