(Reading time: 25 - 49 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”அந்த சிலம்புதானே”

  

“இல்லை நீதான்”

  

”நானா”

  

”ஆமாம் உனக்கும் மாதவிக்குமான உறவை வைச்சி சிலம்பு மிரட்டியே கண்ணகியை அடிமையாக்கி வைச்சிருக்கான், பாவம்பா கண்ணகி, அவளுக்கு துணையா யாருமே இல்லை, பெரியவரும் போய் சேர்ந்துட்டாரு, புருஷனும் விலகியிருக்கான் அவளோட தோழியோ எங்க இருக்காள்ன்னு தெரியலை, தனியாளா ஆயிட்டா, தனிமையில வாடி வதங்கறா அவளை பார்க்கவே பாவமா இருக்கு”

  

”அதுக்கு என்னை என்ன செய்ய சொல்றீங்க அவளோட வாழ சொல்றீங்களா”

  

”இல்லைப்பா கல்லூரியை காப்பாத்துன்னு சொல்றேன், அவளால மறுபடியும் தாளாளர் வேலைக்கு போக முடியாது, நீயாச்சும் போய் கல்லூரியை சரிகட்டு கைகூப்பி கெஞ்சி கேட்கறேன், கண்ணகிக்காக செய்ய வேணாம், இறந்துப் போன உன் தாத்தாவுக்காக செய்ப்பா” என கைகூப்பி கெஞ்ச கோவலன் மனம் இரங்கினான்

  

”அங்கிள் ப்ளீஸ் ஏன் இப்படி கெஞ்சறீங்க விடுங்க நான் பார்த்துக்கிறேன்”

  

”நீ காலம் தாழ்த்தினா அப்புறம் கல்லூரியை இழுத்து மூடிடுவாங்க”

  

”நான் பார்த்துக்கிறேன் அங்கிள் நீங்க கிளம்புங்க” என சொல்ல

  

”உன்னை நம்பி நான் போறேன் என் நம்பிக்கையை ஏமாத்திடாத” என சொல்லிவிட்டு அவர் சென்றதும் கோவலன் பலமாக யோசித்தான்

  

”கண்ணகிக்கு என்னாச்சி, ப்ச் கடவுளே இங்க நான் மாதவியில்லாம விதியேன்னு கம்பெனியை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.