தொடர்கதை - சின்ன மருமகள் - 13 - சசிரேகா
தாய் தந்தை வீட்டை விட்டு சென்றதும் வேங்கையனுக்கு வாழவே பிடிக்கவில்லை, ஜானகியைப் பார்த்தான் வெறுப்பே வந்தது, என்ன நினைத்தானோ சட்டென எழுந்து நிற்க ஜானகி வந்தாள்
”மாமா”
”வேணாம் அப்படி என்னை கூப்பிடாத கேட்கவே நாராஸமா இருக்கு” என்றான் கோபமாக
”என்னை மன்னிச்சிடுங்க மாமா இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கலை”
”அதான் நடந்திடுச்சே இனி நடக்க என்ன இருக்கு கிளம்பு”
”எங்க”
”உன்னை உன் வீட்ல விட்டுடறேன்”
”நான் இங்கிருந்து வரமாட்டேன்”
”நானே இங்க தங்கறதா இல்லை”
”ஏன்“
”என் அப்பா அம்மா இல்லாத இந்த வீட்ல என்னால ஒரு நிமிஷம் கூட இருக்கப் பிடிக்கலை நான் தோப்பு வீட்ல தங்கிக்கிறேன், என்னிக்கு என் அப்பா அம்மா இங்க வர்றாங்களோ அன்னிக்கு இங்க வர்றேன்”
”அப்ப நானும் உங்களோட தோப்பு வீட்ல தங்கிடறேன்”
”தங்கி என்ன செய்யலாம்னு இருக்கே என்கூட வாழப்போறியா”