தொடர்கதை - பூவா? தலையா? - 13 - சசிரேகா
முழுதாக 10 மாதங்கள் முடிந்த நிலையில் கோவலனின் பிறந்த நாள் வந்தது, அதை அவன் வெகுவிமிரிசையாக செய்வான் என எதிர்பார்த்த கண்ணகிக்கு ஏமாற்றம், அவளை அழைத்துக் கொண்டு கோயில் சென்று வீடு திரும்பினான்
”என்ன அவ்ளோதானா“
”வேற என்ன ஓ ஊட்டிக்கு போகனும்னு சொன்னியே அதுவா“
”அது இல்லை உங்க பிறந்த நாளை பெரிசா பிரமாண்டமா செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன்”
”இல்லை செய்ய பிடிக்கலை”
“ஏன்”
”என் வாழ்க்கையில முக்கியமான அங்கமா இருந்தவங்க இப்போ என்கூட இல்லை அதனால எனக்கு பெரிசா விழா எடுக்க பிடிக்கலை“
”ஓ மாதவியா தெரியுமே” என சலிப்பாகச் சொல்ல அவனோ அதிர்ந்து
”லூசு கண்ணகி நான் மாதவியை சொல்லலை என் தாத்தாவை சொன்னேன்”
”ஓ சாரி”
”என்னத்த சாரி எப்ப பாரு மாதவி மாதவின்னு அவளை பத்தியே பேசற நான்கூட அவளை மறந்துடறேன் நீ அவள் பேரை சொல்றப்பதான் எனக்கு ஞாபகம் வருது தெரியுமா”
”ஏன் மறந்துடறீங்க உங்க காதலியை மறக்கறது பாவம்”
”வெறுப்பேத்தாத என்னவோ எனக்கு அவள் நினைப்பு இப்பலாம் வரலை அதை நினைச்சி சந்தோஷப்படுவியா அதை விட்டுட்டு அதுக்கும் ஒரு குறை சொல்லு” என திட்ட அதே நேரம்