(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

வைஜெயந்தி ப்ரியாவின் குழப்பத்தை புரிந்துக் கொள்ளாமல் பேசினாள்!

  

“அத்தை...!”

   

“உன் அடம், பிடிவாதம் எல்லாம் எனக்கு தெரியும் ப்ரியா! நான் சொன்னா நீ கேட்கப் போறது கிடையாது... அதும் தெரியும்... ஆனாலும் ராஜி கிட்ட இதை எல்லாம நான் சொல்ல முடியுமா? அவக் கேட்டதும் கெத்தா ப்ரியா இங்கே தான் தங்குவான்னு சொல்லிட்டேன்...”

   

“அவங்க என் கிட்ட கேட்டு இருந்திருக்கலாம்...”

  

தன் மிரட்டல் உரட்டல்களுக்கு அசராமல் வேறு பதில் சொன்னவளை உற்றுப் பார்த்தாள் வைஜெயந்தி. ப்ரியாவும் அமைதியாக நின்றிருந்தாள்!

   

இறுதியில், ஒரு பெருமூச்சை வெளியேற்றிய வைஜெயந்தி, “இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகலை... நீயே போய் ராஜி கிட்ட சொல்லிடு... நான் தான் சொன்னேனே...” என்றாள் அலுப்புடன்!

   

“அத்தை, நான் சாதனா கூட அந்த வீட்டுல தங்க தொடங்கி இரண்டு வருஷம் ஆகப் போகுது... இது வரைக்கும் எந்த ப்ராப்ளமும் இல்லையே... இங்கே ஒரு வாரம் அதிகமா தங்குறதுல என்ன மாறிடப் போகுது???”

   

“சாதனா உன் கூட தங்கி இருக்கான்னு பேரு! ஆனால் அவளுக்கு வேலையே சரியா இருக்கு... நீ தனியா தான் இருக்கனும். அந்த ரூமுக்கு அப்படி அவசரமா போய் என்ன செய்யப் போற? இன்னும் ஒரு வாரமோ, இரண்டு வாரமோ இங்கே இருந்தா உனக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும் தானே? வர்ஷா இருக்கா, நீ அவக் கிட்ட பேசலாம்... ராஜியும் துணைக்கு இருக்கா... அங்கிளும் இருக்கார்... விக்கிராந்த் பத்தி யோசிக்கிறீயா என்ன? அவன் வேலையை தாண்டி எதையும் கவனிக்கவே மாட்டான்... நீ ரூமைப் போலவே இங்கேயும் சுதந்திரமாவே இருக்கலாம் ப்ரியா...”

  

விக்கிராந்த் பற்றி வைஜெயந்தி பேசியதும் ப்ரியாவின் மனதில் என்ன என்றே சொல்ல

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.