”அதை நான் பிரிச்சிக்கூட பார்க்கலை”
”ஏன்“
”பார்த்தா பிரச்சனை, அதனால அதையும் பார்க்கலை அதை கொண்டு வந்து கொடுத்த வக்கீல் கதையையும் அன்னிக்கே முடிச்சிட்டேன், இனி உயில் பத்தி யாரும் பேசப் போறதில்லை ஆனா, அங்கமுத்து அந்த உயில் பத்தி தெரிஞ்சி வைச்சிருக்கான் அதான் எப்படின்னு தெரியலை, அவன் கைக்கு மட்டும் அந்த உயில் போயிட கூடாது, அதை எப்படியாவது கண்டுபிடிக்கனும் நீ எனக்கு உதவி செய்”
”முடியாது இனி உங்களுக்கு நான் உதவறதா இல்லை காலம் காலமா சொத்தை காட்டியே என்னை கொலைக்காரனாக்கினீங்க, இனியும் உங்க பேச்சை கேட்டு நான் நடக்கப் போறதில்லை”
“வேற என்ன செய்யப் போற நடந்த உண்மைகளை வெளிய சொல்லி என்னை மாட்டிவிடப் போறியா”
”இல்லை உண்மை எப்படியிருந்தாலும் தன்னால வெளிய வரும் இல்லைன்னாலும் நாச்சியா போதும் அதை வெளிய கொண்டு வரவைக்கறதுக்கு“
”இப்படி அபசகுனமா பேசி வைக்காதடா”
”போதும்பா செய்த பாவமே போதும் மேலும் மேலும் பாவம் செய்ய வேணாம், இதோட நிறுத்திக்கலாம் நாம இங்க இருக்க வேணாம் இங்கிருந்து போயிடலாம்“
”எங்கடா போக சொல்ற“
”வேற எங்க கீழவீதிக்குதான்”
”போடா முட்டாள், அந்த இடத்தில இருந்து நான் இந்த இடத்துக்கு வர்றதுக்கு எவ்வளவு தில்லு