தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 18 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒரே வினாடியில் மனதில் தோன்றிய எண்ணத்தை அவசரமாக மறைத்துக் கொண்டாள் ராஜம்! ப்ரியா, விக்கிராந்த் இருவரும் உள்ளே வர வழி விட்டு கதவை மீண்டும் மூடி தாளிட்டாள்.
“என்ன இது ப்ரியா? இப்படி ராத்திரி நேரத்தில நீ பாட்டுக்கு நாய் குட்டியை செல்லம் கொஞ்ச போறேன்னு சொல்லிட்டு போய்ட்ட?” ப்ரியாவை உரிமையுடன் கடிந்துக் கொண்ட ராஜம், பின், அவளை ஆச்சர்யமாக பார்த்தபடி நின்றிருந்த விக்கிராந்த் பக்கம் கவனத்தை திருப்பினாள்.
“விக்கி, என்னப்பா இன்னைக்கும் இவ்வளவு லேட்? தினம் தினம் இப்படி லேட்டா சாப்பிட்டு தூங்கினா உடம்பு என்னத்துக்கு ஆகும்? வா, சீக்கிரம் வந்து சாப்பிடு...”
“ஷர்ட் மாத்திட்டு வரேன்ம்மா...” பதில் சொல்லிவிட்டு விக்கிராந்த் அவனின் அறையினுள் சென்றான்.
கதவை சாத்தி விட்டு, முதல் காரியமாக மொபைல் ஃபோனை கையில் எடுத்து ஆர்த்தியை அழைத்தான்.
முதல் ரிங்கிலேயே அழைப்பு ஏற்கப்பட்டு, ஆர்த்தியின் இனியக் குரல் அவனின் காதில் கேட்டது!
“ஹலோ விக்கி...”
“ஆர்த்தி, உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்...” விக்கிராந்த் தன் குரலை இயல்பாக காட்டிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டே பேசினான்!
“ஹலோ! இது நல்லா இருக்கே! இன்னைக்கு மொத்தமா எத்தனை தடவை உங்களுக்கு ஃபோன் செய்தேன்? இரு தடவையாவது பேசினீங்களா? பிஸி பிஸி பிஸின்னு சொல்லிட்டு... இப்போ மட்டும் என்ன?”
“இல்லைம்மா, வேலை...”