”அண்ணா இதுக்கு நீங்க நந்தினியை காதலிக்கிறேன்னே சொல்லிடலாம்” என தனக்குள் நினைத்துக்கொண்டு
”சரி சரி வாங்க முதல்ல நாம சாப்பிடலாம் அதுக்கு அப்புறம் என்ன செய்றது ஏது செய்றதுன்னு யோசிச்சி ஒரு நல்ல முடிவா எடுக்கலாம் பயங்கரமா பசிக்குது அண்ணா வாங்கண்ணா தங்கச்சி வாம்மா” என அழைக்க அவர்களும் வந்தார்கள்.
அர்ஜூன் கொண்டு வந்திருந்த டிபனை சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அர்ஜூனோ தன் மனதில்
”எப்படியாவது இவளை ஹாஸ்டல்ல விட்டுடனும் தாத்தாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை வரும் எப்படியாவது இந்த பிரச்சனையை சரிசெஞ்சிடனும்.” என நினைத்துக்கொண்டான்.
நந்தினியோ
”இல்லை நாம இங்க இருக்க கூடாது யாருக்கும் பாரமா இருக்க கூடாது முக்கியமா அத்தானுக்கு என்னால பிரச்சனை வரக்கூடாது. நாம கிளம்பிடலாம் அதுக்காக அவர் கூட சண்டையானாலும் பரவாயில்லை அவர் மானம் போயிடாம பார்த்துக்கனும்” என தனக்குள் நினைத்துக்கொண்டாள்
”என் வாழ்க்கையில வந்த பொண்ணுங்கள விட இவள் நல்லவளா இருக்கா பாவம் யாருமில்லை. தனியா விட்டா தற்கொலைக்கு முயற்சி செஞ்சாலும் செய்வா எப்படியாவது நந்தினியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போகனும் அதுக்கு தாத்தா கிட்ட பேசியாகனும் பேசி புரியவைச்சே இவளை கூட்டிட்டு போயிடலாம்” என தனக்குள் நினைத்துக்கொண்டான் ரிஷி.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.