தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 25 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்ட செவ்வந்தி, “கிருத்திகா!!!! வாடா வா... எப்படி வந்த? தனியாவா வந்த?” என ஆரவாரத்துடன் பேசி மருமகளை வரவேற்றாள்!
கஸ்தூரியையும் உள்ளே வர சொல்லிவிட்டு வீட்டினுள் சென்ற கிருத்திகா,
“தனியா வர வழி தெரியாதே அத்தை. கஸ்தூரியை துணைக்கு அழைச்சிட்டு வந்தேன்... மாமா ஆஃபிஸ் போயிட்டாரா?” என்று வினவினாள்.
“இல்லடா... அவருக்கு ட்ராவலே ஒத்துக்காது... அதுவும் குளிரான இடம் சுத்தமா ஒத்துக்காது... நீ கிடைச்ச சந்தோஷத்துல அதெல்லாம் கண்டுக்காமல் இருந்தாரா, இப்போ இரண்டு நாளா ஜுரம் வந்து படுத்திருக்கார்.”
“மாமாக்கு ஜுரமா??? அச்சச்சோ... டாக்டர் பார்த்தீங்களா அத்தை?”
“பயப்பட எதுவுமில்லைடா... சாதாரண ஜுரம் தான்... என்ன சாப்பிடுற சொல்லு... எங்க இரண்டு பேருக்கும் ஒத்துக்காதுன்னு ஃப்ரிட்ஜ்ல எதுவும் வாங்கி வைக்குறதில்லை... உனக்கு என்ன வேணும் சொல்லு...”
செவ்வந்தி அன்பு மழையில் குளிர்ந்து போயிருந்த கிருத்திகா,
“எதுவும் வேண்டாம் அத்தை... மாமாக்கு உடம்பு சரியில்லைன்னு அவருக்கு தெரியுமா?? நீங்க மட்டும் தனியா இருந்து எல்லாம் செய்யனுமே,” என்றாள் அக்கறையாக.
“யாரு தியாகுவுக்கா? தெரியும்டா... அவன் தான் டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போனான்... இரு, இரு முதல்ல உனக்கு சூடா காஃபி போட்டு தரேன்...”
“ஐயோ அத்தை, எனக்கு அதெல்லாம் வேண்டாம்... நீங்க உட்காருங்க... வீட்டுல வேலைக்கு ஆள் வைக்கலையா நீங்க?”
“எங்க இரண்டுப் பேருக்கு எதுக்கு வேலைக்கு ஆள் எல்லாம்? நானே பார்த்துப்பேன்... வீட்டை