தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 32 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ராஜம் பக்கம் இருந்து மெல்லிய சலசலப்புக் கேட்டது. படுத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த ராஜம் எழுந்து அமர்வதை விக்கிராந்தால் மறுமுணையில் இருந்து புரிந்துக் கொள்ள முடிந்தது!
இரவு நேரத்தில் அம்மாவை தொல்லை செய்து விட்டோமோ என்று அவன் யோசிக்கும் போதே,
“விக்கி! அதனால் தான் இந்த டைம்ல கூப்புடுறீயா?? ரொம்ப ஃபீல் செய்றீயா? நான் வேணா ஆர்த்தி கிட்ட பேசி பார்க்கவா?” என்ற ராஜமின் குரல் அக்கறையும் பரிவும் கலந்து ஒலித்தது!
விக்கிராந்தினுள் அம்மாவின் பாசத்தினால் மெல்லிய இதம் உருவானது.
“இல்லம்மா அதெல்லாம் வேண்டாம். ஆர்த்தி எடுத்த முடிவு சரி தான், எனக்கே அதெல்லாம் சரி பட்டு வரும்னு தோணலை!”
“பொய் சொல்லாதேடா! நீ அமெரிக்கால அஞ்சு வருஷம் இருந்தப்போ கூட தூக்கம் வரலைன்னு எல்லாம் சொன்னதே இல்லையே!”
“ப்ச்... அப்படி இல்லைம்மா. இது வேற விஷயம்! சரி, நான் தான் ஊருக்கு வரேனே நேரா பேசிக்கலாம். நீங்களாவது தூங்குங்க!”
இனி எங்கே இருந்து தூங்குவது என ராஜம் யோசிக்கும் போதே அழைப்பை துண்டித்திருந்தான் விக்கிராந்த்!
🌼🌸❀✿🌷
ராஜம் வழியாக விஷயம் அறிந்ததும் கணபதியின் முகத்தில் யோசனை படர்ந்தது! வர்ஷாச்வோ இது எதிர்பார்த்தது தானே என் மனதுள் யோசித்து குதூகலமானாள்.
“மம்ஸ், நீங்க நேத்து கேசரி செய்தப் போதே நான் கெஸ் செய்திருந்திருக்கனும்! ஆர்த்தி