தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
65. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இந்து தனக்குள் யோசனையில் ஆழ்ந்து அமைதியாக இருக்க, சஞ்சீவ்,
"உன்னை பத்தி எனக்கு தெரியாது இந்து, ஆனால், நான் என் மனைவியா வரவ என் கிட்ட எல்லாத்தையும் ஷேர் செய்யனும்னு விரும்புறேன். இந்த உலகத்துல இருக்க எல்லோரையும் விட என் மேல நம்பிக்கை வைக்கனும்னு ஆசைப் படுறேன். அதுவும் உனக்கு என்னை தெரியாதா??? என் மனசை தெரியாதா??? ஆனாலும் நீ என் கிட்ட மட்டும் எதையுமே சொல்லலை??" என்றான்!
அவன் அதை கேட்ட விதம் இந்துவை என்னவோ செய்தது!
"உங்க கிட்ட மட்டும் இல்லை, நான் வேற யார் கிட்டேயும் அதைப் பத்தி சொல்லலையே சஞ்சீவ்! என் மனசிலேயே தான் போட்டு வச்சிருந்தேன்," என்றாள் மென்மையாக!
"பொய்!"
"நிஜம் சஞ்சீவ். நான் பொய் சொல்லலை!"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே அம்மா வீணா அவங்க கிட்ட வந்து கோபமா பேசினதை சொன்னாங்க????"
"வீணா கிட்டேயும் நானா எதையும் சொல்லலை சஞ்சீவ். எல்லாமே அவளாவே கண்டுபிடிச்சது தான்."
சஞ்சீவ் அவள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாக தலையை மறுப்பாக அசைத்தான்!
"நீ பேசுறது ஏதாவது உண்மையா இருக்குமான்னு எனக்கு இப்போ சந்தேகமா இருக்கு!"
"சஞ்சீவ், கோபப் படாம நான் சொல்றதைக் கேளுங்க! நமக்குள்ளே வந்த இந்த கொஞ்ச நாள்