தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 35 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
எதிர்பாராத நேரத்தில் கரண்ட் ஷாக் அடித்து விட்டதைப் போல் திகைத்துப் போய் விக்கிராந்தைப் பார்த்தாள் வைஜெயந்தி.
விக்கிராந்த் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“விக்கி!”
“ஆமாம் பெரியம்மா, எனக்கு ப்ரியாவை ரொம்ப பிடிச்சிருக்கு, நான் அவங்களை விரும்புறேன். நீங்க இப்படி வேற மாப்பிள்ளை பார்க்குறது தெரிஞ்சப் பிறகும் நான் பேசாமல் சும்மா இருக்க முடியாதே?”
“வேண்டாம் விக்கிராந்த்! இதெல்லாம் சரியா வராது.”
“ஏன் அப்படி சொல்றீங்க? நான் ப்ரியாவை சந்தோஷமா பார்த்துப்பேன்.”
“அது எனக்கு தெரியும்ப்பா. ஆனால் எனக்கு இப்போ சொந்தமுன்னு உதவிக்கு இருக்கிறதே உங்க அம்மாவும் அப்பாவும் மட்டும் தான். அவங்க இதை கேட்டா.... ம்ம்ம்... வேண்டாமே விக்கி...”
“பெரியம்மா, முதல்ல ப்ரியாவை கல்யாணம் செய்துக்குறீயான்னு என்கிட்டே கேட்டதே அம்மா தான்.”
“என்ன?”
வைஜெயந்தியின் குரலில் நெகிழ்ச்சி இருந்தது.
“ஆமாம், நான் அப்போவே சரின்னு சொல்லி இருந்தா இந்நேரம் எங்க கல்யாணமே முடிஞ்சிருக்கும். நான் தான் லூசு மாதிரி... சரி, அதை விடுங்க, நீங்க சொல்லுங்க! நான் ப்ரியாவை கல்யாணம் செய்துக்குறேன், உங்களுக்கு சம்மதமா??”