தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 37 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விஜயின் குரலில் இருந்த அதிர்ச்சி கீதாவை யோசிக்க வைத்தது. ஆனால், அவளை அதிகம் யோசிக்க விடாமல்,
“ஏன் கீத்ஸ் இப்படி சொல்லுற???” என வினவினான் விஜய்!
சின்ன தயக்கத்திற்குப் பின், “கல்யாணம்னா அந்த பொண்ணு பையனை பத்தி மட்டுமே யோசிக்கனுமா? இரண்டு பேர் குடும்பத்தையும் யோசிக்கனும் தானே? பெரியம்மா அவங்க வீட்டுக்கு வர போற மருமகளை பத்தி நிறைய ஆசை வச்சிருக்காங்க,” என மனதில் இருந்ததை சொன்னாள் கீதா.
“அப்போ என் தங்கை நல்லவ இல்லைன்னு சொல்றீயா?”
விஜயின் கேள்வியில் மெல்லிய கோபம் கலந்திருந்தது! கீதா அதற்காக பெரிய அளவில் கலக்கம் அடையவில்லை! நிதானத்துடனே பேசினாள்!
“கோபப் படாதீங்க விஜய். யோசிச்சு பாருங்களேன்! உங்க பிரின்சஸை பெரியம்மா வீட்டுல அட்ஜஸ்ட் செய்து இருன்னு சொல்ல முடியுமா? மூணு பாசக்கார அண்ணாக்களும் பொங்கி எழுந்திர மாட்டீங்க?”
கீதாவின் பதில் விஜயையும் யோசிக்க வைத்தது!
“நீ சொல்றது கரக்ட்டுடா கீத்ஸ். ஆனால் எனக்கு ஒன்னு சொல்லு! உனக்கு உங்க அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமா?”
“இது ஏன் இப்போ இப்படி ஒரு கேள்வி? இரண்டு பேரையுமே பிடிக்கும்.”
“நீ உங்க வீட்டுல ஒரே செல்லப் பொண்ணு. உன்னை தவிர வேற யாராவது அத்தை மாமா கிட்ட அட்வான்டேஜ் எடுத்தா எப்படி ஃபீல் செய்வ?”
“வேறென்ன, கோபம் வரும்! அம்மா கிட்ட சில சமயம் நேராவே சொல்லி இருக்கேன். நான்