தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
68. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சில வினாடிகள் அங்கே கனத்த அமைதி நிலவியது!
பக்கத்தில் எங்கோ காலடி சத்தம் கேட்கவும், இந்து அங்கே இருந்து எழுந்து சென்றாள். அவள் கண்களில் இருந்த வருத்தம் மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறாள் என்பது சஞ்சீவிற்கு புரிந்தது. அவனுடைய இதயத்தில் இருந்த பாரம் இன்னும் அதிகமானது!
எதற்காக இப்படி அவளையும் துன்புறுத்தி அவனும் கஷ்டப்பட வேண்டும்???
இந்த எண்ணம் தோன்றிய அடுத்த வினாடியே அவனின் அறிவு, ‘டேய் சஞ்சீவ், உன்னை லூசு மாதிரி அலைய விட்டுட்டு அவ இப்போ வந்து ஒரு ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டா நீ அப்படி உருகிடுவியா? இதெல்லாம் பார்த்தால் ஒன்னும் நடக்காது,’ என்று சொல்லி மிரட்டியது!
தானாக சஞ்சீவின் முகம் மீண்டும் இறுகிப் போனது!!!
அவனுக்கு அவனின் இதயத்திற்கும், அறிவிற்கும் நடுவே நடந்துக் கொண்டிருக்கும் யுத்தம் புரியாமல் இல்லை! இந்துவின் மேல் அவனுக்கு காதலும் அக்கறையும் இருந்தாலும், கண்ணை மறைக்கும் கோபமும் இன்னமும் இருந்தது!
முன்பு காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவளிடம் ‘வாங்கி கட்டிக்’ கொண்டதனால், இப்போது இதயத்தை விட அறிவிற்கே (!!!) அதிக முக்கியத்துவம் கொடுத்தான்!
அதனால் இந்துவின் வருத்தம் புரிந்தாலும் அதைப் பற்றி எதுவும் பேசாமலே இருந்தான்!
🌼🌸❀✿🌷
அதற்குப் பிறகு சஞ்சீவும் இந்துவும் நேராக சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை!
திருமண பத்திரிக்கை வாங்க ஒன்றாக செல்லலாம் என இரண்டு குடும்பத்தினரும் திட்டமிட்டனர். அதற்கு சஞ்சீவையும் வற்புறுத்தி அழைத்து வந்தாள் காஞ்சனா! ஆனால் அன்று இந்துவிற்கு ஜுரம் இருந்ததால் அவள் வரவில்லை!