மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 36 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“என்னது? நான் ஹெல்ப் செஞ்சேனா???” தென்றல்வாணன் சந்தேகத்துடன் சக்தியிடம் இருந்து பார்வையை சத்யா பக்கம் திருப்பினான்!
அவனின் நடவடிக்கையை கவனித்து புன்னகைக்க எழுந்த ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு,
“எஸ் தேன்! நீங்க கொலை செய்ய பயன்படுத்தின ட்ரோன் பத்தின விபரங்களை பாதுகாப்பு காரணத்துக்காகவும், இன்வெஸ்டிகேஷன் பர்பஸ்க்காகவும் யார் கிட்டேயும் சொல்லலைன்னு என் கிட்ட சொன்னீங்க. என்னையும் யார் கிட்டேயும் அதைப் பத்தி சொல்ல வேண்டாம்னும் சொன்னீங்க,” என்றாள் சீரியஸாக!
“ரைட்,” என்றான் தென்றல்வாணன் கேள்வியுடன்!
“கொலை நடந்தப்புறம் நான் ஸ்ரீனிவாஸ் கிட்ட பேசினப்போ, நான் ட்ரோன்னு சொல்றதுக்கு முன்னாடியே அதை நேருல பார்த்திருக்க மாதிரி அப்படியே டிஸ்க்ரைப் செய்தான். நான் அந்த ட்ரோனைப் ஆக்ஷன்ல பார்த்திருக்கேன், அதனால என்னால சொல்ல முடியும். மத்தபடி காட்டுல அதைப் பார்த்தவங்களும் அப்போ ஏற்பட்ட அதிர்ச்சியால அதை சரியா டிஸ்க்ரைப் செய்யலை. வேற யாரும் அப்போ அந்த ட்ரோனை பார்த்ததும் இல்லை. ஆனாலும் ஸ்ரீனிவாஸ்க்கு தெரிஞ்சு இருந்தது. ஸோ, ஸ்ரீனிவாஸ்க்கு க்ரைம்ல சம்மந்தம் இருக்குன்னு புரிஞ்சது. ஆனால் சந்திரமௌலியை ஷூட் செய்தப்போ ஸ்ரீனிவாஸ் திருவிழால இருந்தான். கட்டாயம் அங்கே இருந்து தனியா அவனால் எதையும் செய்திருக்க முடியாதுன்னு தோணிச்சு. அவனுக்கு ஹெல்ப் யாருன்னு அடுத்த கேள்வி வந்தது. ஐஸ்வர்யா, ராகுல், கலைவாணின்னு எல்லோர் மேலேயும் சந்தேகம் வந்துச்சு. ஒருவேளை ராகுல் ஆர் கலைவாணி இதுல சம்மந்தப் பட்டு இருந்தா அவங்களும் திருவிழால இருந்தாங்க. எப்படியாவது ஸ்ரீனிவாஸ் ட்ரோனை ஆபரேட் செய்ய ஹெல்ப் செய்திருக்கலாம்னு தோணிச்சு. ஆனால் கடைசியா ஐஸ்வர்யா மேல சந்தேகம் வர ப்ரியம்வதாவும், வினாயக்கும் சொன்ன ஒரு டீடெயில் காரணமா இருந்தது!”
வினாயக்கும், ப்ரியம்வதாவும் என்ன என்று தெரியாமலே தங்களுக்குள் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.