(Reading time: 12 - 23 minutes)

01. யாதுமாகி நின்றாய் காளி - சத்யா

ன்னால முடியல. நான் என்ன தப்பு பண்றேன்னு எனக்கு புரியல. நான் ரொம்ப நல்லவ இல்லைதான் ஆனா தெரில எப்படி சொல்றதுன்னு தெரில.உங்களுக்கு இது புரியுதா?? நான் என்ன பண்ணனும்னு தெரில பா. எனக்கு பொறுமை கொஞ்சம் கூட இல்லை.

முகம் எல்லாம் நூறு உணர்சிகளை கொட்ட அவள் பேசும்போது ஐயோ மீரா என்று அணைத்து கொள்ளதான் எண்ணம் போகிறது.அனால் இப்பொழுது அணைத்தால் காளி ஆவாள்.( Title Kaali is dedicated to meera J).

அடங்கி போனான். புதிது இல்லை அவனுக்கு தன்னை அடக்கி கொள்வது.என்றுமே தன்னை முன்னிலை படுத்தி அவன் யோசித்து இல்லை. அதிலும் மீராவுக்கு குறை உண்டு. அவளுடைய கோவம் அவனை வருத்தம் கொள்ள வெய்க்காது.வியந்து போவான் 6 மாதத்தில் ஒருத்தியால் இந்த அளவு தன்னை பாதிக்க முடியுமா என்று.??

Yathumagi nindraai kaaliமீரா இங்க வா என் மடியில் படுத்துக்கோ. நான் சொல்றது கேளுமா என்றான்,

அவள் கோவம் குறையவில்லை. ஒன்னும் வேண்டாம் போ என்று கண்ணை மூடி தூங்குவது போல் இருந்தால். தவித்துதான் போனான் கண்ணன். மீராவின் புரகநிப்பா இல்லை அவுளுடைய நியாமான ஆசைகளை இவனால் செயல்படுத்த முடியாமல் இருப்பதா,.எது என்று தெரியாமல் குழம்பி போனான்.

அனால் தன்னையும் மீறி நெறைய விஷயங்கள் மாற்ற வேண்டிய சமயம் வந்ததை உணர்ந்தான். அதை எந்த பக்கமும் சேதாரம் இல்லாமல் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தான் . அனால் பாவம் கண்ணனுக்கு தெரியவில்லை சேதாரம் என்பது பொன் நகை, புன்னகை இரண்டிலும் இருக்கும் என்பது.

மீராவின் அளவுக்கு அதிகமான பிரியம் அவனை பல சமயங்களில் நெகிழ செய்யும். கண்ணன் என்றுமே தீவரமாக ஆடம்பரமாக ஆசை பட்டது இல்லை. அனால் சின்ன சின்ன ஆசைகள் மனதின் ஓரத்தில் தன்னவுளுக்காக என்று பதிவு செய்து வெயப்பான்.

இன்று  மீராவை சமாதான படுத்த முடியுமா என்று தெரியவில்லை. அவனும் கலைத்து போயிருந்தான். IT துறையில் மேனேஜர் பதவி வகிப்பவன் களைப்படையாமல் இருந்தால்தானே ஆச்சர்யம்.,
மீரா கண்ணன் ஓய்வெடுக்கும் இந்த தருணத்தில் அவர்களை பற்றி சிறு அறிமுகம் உங்களுக்காக.

மீரா - அழகே அழகான மீரா ( என் கதாநாயகி என் கண்ணனுக்கு செம அழகு :-)) மாநிறம், கலையான முகம் , பூசிய உடல் வாகு, நெறைய படபடப்பு , குழந்தைத்தனம், அம்மா மேல் உயிரானவள், வாய் ஓயாத பேச்சு, நெறைய ரசனை கற்பனை நிறைந்தவள். ஒரு புகழ் பெற்ற தனியார் நிறுவனத்தில் கார்யதர்சி.

அவளால் அவளையே முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் இது போதும் இப்போதைக்கு இவளை பற்றி.

கண்ணன் - கதாநாயகன், ஆதிக்க நாயகன் இப்டிதான் மீரா அவனை அடிக்கடி செல்லமாக கூப்பிடுவாள்..தனிமையில் அவன் நெஞ்சில் சாய்ந்து கட்டை குரலில் மெதுவாக பாடுவாள் " ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே" ...அழகான வரிகள், அற்புதமான பாடல்.கண்ணனை பற்றி பேசினால் மீரா நெறைய வருவாள் அவனை ஆராதிப்பால்.( போதும் உன் மீரா புராணம் என்று நீங்கள் முறைப்பது தெரிகிறது , சரி தெரியாது , உணர்கிறேன் :-) ) கண்ணன் அழகன்.உருளைகிழங்கு தோல் உரித்தால் ஒரு நிறம் இருக்கும் அல்லவா அந்த நிறம். மிதமான உயரம், அளவான உடல் வாகு & மிக மிக நிதானமான , பொறுமையான குணம் உள்ளவன்.கடினமான உழைப்பாளி அது ellamal IT துறையில் எப்படி மேனேஜர் ஆவது. அவனுடைய ரசனை மிக எளிமையானவை. அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்று அவன் முகம் பார்த்து இல்லை அவன் குரல் கேட்டோ அறிவது மிக கடினம். நெறைய சிந்திப்பான், தனக்கு கெடுதல் செய்யும் ஆளிடம் கூட நல்ல விஷயங்கள் இருந்தால் அதை மட்டும் அன்ன பறவையென கிரகித்து கொள்வான்.கோவம் அவன் அறிந்திராத குணம். பிடிக்காத குணமும் கூட.

பொழுது புலர்ந்தது. இன்று ஆகஸ்ட் 8th கண்ணனுக்கும் மீராவுக்கும் அன்றோடு திருமணம் ஆகி 8 மாதங்கள் முடிந்து விட்டது, மீரா அடிக்கடி கண்ணனிடம் சொல்வாள் before marriage we pushed the days, after marriage days are pushing us என்று. அதை நினைத்து கொண்டே சிறு புன்முறுவலுடன் எழுந்தான் நமது uk ( உரித்த கிழங்கு என்று சொனேனே அதையே அவனுக்கு pet name ஆகிடலாம்) ஓகே தானே நண்பர்களே.

அப்போ மீராவுக்கு pet name இல்லையான்னு நீங்க கேட்கறீங்களோ.மீராவுக்கு pet name வேண்டாமே மீரா இரண்டு alphabets தானே ஸோ பொழைச்சு போகட்டும்.

மீரா அடுக்களையில் இருப்பாள் என புரிந்தது ஏனெனில் அவன் தாய் ஹாலில் இருந்தால். அது என்னவவோ எல்லோரையும் வசீகருக்கும் மீரவால் மாமியாரை நெருங்க கூட முடியவில்லை, கண்ணன் brush  செய்து கொண்டே ஓரகண்ணால் மீராவை பார்த்தான். மீரா சின்ன புன்னகையுடன் அவனுக்கு புரியவேண்டிய பார்வையுடன் காபி ரெடி என்று டேபிள் மேல் கொண்டு veithhaal.அவனுக்கு தெரியும் இனி மீராவை சமாளிப்பது எளிது என்று, அந்த சமாதானத்தில் அன்றைய வேலை கவனிக்க தயாரானான்.எவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றம் புன்னகை பரிமாற்றம் ஒரு ஜோடி கண்களிடமிருந்து தப்பவில்லை. அவர்கள்தான் மாண்பிமிகு மாமியார் அவர்கள். ,மீராவின் மாமியார், UK வின் அம்மா. பெருமதிப்பிற்குரிய சுந்தரி அவர்கள். சுந்தரி அம்மாவை பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.uk மீரா அலுவலகம் செல்லட்டும்,

சுந்தரி அம்மாள் - 60 வயது நெருங்கிகர்து என்றால் அவர் உபயோகிக்கும் haridye கூட நம்ப முடியாத சுருசுருப்பானவர்., ஒரே மகனான uk மேல் வெறி கலந்த பாசம் கொண்டவர்.நெறைய வாழ்கை கற்றுகொடுத்த பாடங்களை பொறுமையாக கற்று தெரிந்தவர்.படபடவென பேசுபவர்.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த கதைக்கான அணைத்து பக்கத்தையும் அவரை பற்றி சொல்லி நிரப்பலாம். அதனால் போக போக புரிந்து கொள்வோம்.

சுந்தரி அம்மாளின் கணவரை சொல்ல மறந்தேனே - நாராயணன் அவர் பெயர்.UK 70 வயதில் இப்டிதான் இருப்பான் என்று சொல்லும் அளவிற்கு உருவத்தில் UK போலவே இருப்பார். அசாத்திய உழைப்பாளி, நவீன நக்கீரர் அவர். குற்றம் குற்றமே என்று அடித்து ( இபொழுது டேபிளை அடித்து பேசுகிறார் முன்பு அதாவது நமது uk 15 வயது வரும் வரை சுந்தரி அம்மாளை அடித்து சொல்வார்) ஆனால் கோவம் குறைந்த அடுத்த 10 நிமிடங்களில் மறந்து போவார்.இயல்பாய் பேசுவார். இவர் யார் என்று புரிந்து கொள்ள முயற்சித்தால் நாம் முட்டாள் ஆகி போவோம்.

மீரா குளித்து நல்ல பளீர் ரெட் கலர் சல்வாரில் அலுவலகம் செல்ல தயார் அனால். uk மீராவின் முன்னரே அலுவலகத்திற்கு கிளம்பிவிடுவான். அவனுக்கு puncutality மிகவும் முக்யமான ஒன்று, மீராவுக்கு அப்டி போக ஆசைதான் அனால் போக முடியாமல்  ஏதேனும் தடங்கல் வந்துவிடும், அவனையும் நிறுத்தி வெய்க்க மனம் இல்லை அவளுக்கு.இன்று கெளம்ப தயாரனவளை சுந்தரி அம்மாள் அழைத்தார். மீரா , என் இந்த plate inga  வெச்சிருக்க ஒரு பொருள் எடுத்தா எடுத்த எடத்துல வெய்க்க கூட உங்களுக்கெல்லாம் அலுப்பாருகுடி எம்மா என்று நொடித்து கொண்டு சுந்தரி அம்மாள் போனார்கள். மீராவுக்கு நாக்கு துடித்தது ஏதும் சொல்ல வேண்டும் என்று. அனால் பேசாமல் இரு மீரா, பொறுமையாக இரு என்று அவன் ஆதிக்க நாயகன் சொன்னது நினைவில் வந்தது, அடங்கி போனால்.அது எனவோ மீரா செய்யும் எந்த வேலையும் சுந்தரி அம்மாளுக்கு திருப்தி இராது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.