சிறிது நேரத்தில் அவர்கள் வரவும், பூமிநாதணும் மரகதமும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.
"வாங்க வாங்க!!! வணக்கம் தம்பி! உள்ள வாங்க!!"
"வணக்கம்"
அனைவரும் வந்து அமர்ந்ததும் பூமிநாதன் "ரொம்ப சந்தோஷம் நீங்க இன்னிக்கு வந்ததுல, இவங்க என் மனைவி மரகதம், இது ரிதுவோட பிரண்ட்ஸ். இவன் ரஞ்சன், இவ கவிதா. அப்புறம் இவங்க என் அண்ணி சாரதா, இவன் மதன் இவங்களோட பையன், இவ பேரு ரேவதி மதனோட மனைவி"
"ரொம்ப சந்தோஷம்ங்க, இது தான் எங்க குடும்பம் எனக்கு ரெண்டு பசங்க, இவன் ஆதி இவ மதுமதி, இவங்க ஆதியோட பிரண்ட் ரமேஷ், அவங்க ரமேஷோட மனைவி அனிதா, அப்புறம் இது குட்டி அருண் இவங்களோட ஒரே பையன்" என்று எல்லோருக்கும் அறிமுக படுத்தி வைத்தார் சொக்கநாதன்.
"அடடே ரஞ்சன் நீ என்னப்பா இங்க இருக்கற!!!!! நீ பொண்ணு வீட்டு சைடா இல்ல மாப்ளை வீட்டு சைடா" என்று மீனாக்ஷி கேட்டார்.
"ஆன்ட்டி நான் பொண்ணு வீட்டு சைடு தான்" என்று ஆதியை முறைத்து கொண்டே கூறியவன், யாருக்கும் தெரியாமல் மதுவை பார்த்து கண் சிமிட்டினான்.
"அடபாவி" என்று அவனை மனதிற்க்குள் திட்டினாள்.
"சரிங்க, முதல்ல ரிதுவ வர சொல்லுங்க. மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்"
"கவி,ரேவதி நீங்க 2 பேரும் ரிதுவ போய் கூட்டிட்டு வாங்க"
"டேய்!! ஆதி ரிதுவ நல்ல பாத்துக்கோடா காலைல இருந்து என்னை என்னபாடு படுத்தினடா"-ரமேஷ்
"டேய் வாய மூடிட்டு சும்மாஹ் இருடா" என்று ஆதி முனுமுனுத்தான்.
சில நிமிடங்களில் கவியும் ரேவதியும் ரிதுவை அழைத்து கொண்டு வந்தனர்.அவளை பார்த்த ஆதி சில நொடிகள் இமைக்க மறந்தான்.
ஆதியின் கையில் கிள்ளிய மது "டேய் ரொம்ப வழியாதா!! போதும் கொஞ்சம் நினைவுக்கு வாடா!!"
"வணக்கம்!!" என்று ரிது பொதுவாக எல்லாருக்கும் கூறவும், "ரொம்ப அழகா இருக்க ரிது!!! என் பேரு மீனாக்ஷி வா இங்க வந்து உட்காருமா" என்று கூறவும் மறுக்க தோன்றாமல் ரிது சென்று அமர்தாள்.
"இவன்தான்மா என்னோட பையன் ஆதி!!!!! நல்லா பாத்துக்கோ" என்று கூறவும் தன் தலையை உயர்த்தி ஆதியை பார்த்தவள் "சே!!!!! கடைசில இவனா!!!!!!! என்று மனதிற்க்குள் மெளனமாக அதிர்தாள்.
ரிதுவின் முகமாற்றத்தை கவனித்து கொண்டு இருந்த ஆதியும், பூமிநாதனும், ரஞ்சனும் அர்த்தம் பொதிந்த பார்வையை பார்த்தனர்..
காற்று வீசும்
{kunena_discuss:848}