அவள் அப்படி கேட்டதும் எல்லாம் ஐஸ்வர்யாவினால்த்தான் பிரச்சனை முதலில் வீட்டில் பெரியவர்கள் இந்த கல்யாணப்பேச்சை எடுத்த போதே நாம் இருவர் குணமும் தெரிந்தும் திருமண ஏற்ப்பாட்டிற்கு சரி சொல்லியிருக்கக் கூடாது.
இபோழுது பார் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடியும் போது ,மீடியாவிற்கு எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிய பின்பு இந்த கல்யாணம் நின்று போகப் போகிறது. இதை எப்படி அப்பாவும் பெரியப்பாவும் ஏற்றுக்கொள்ளப் போகிறார்களோ!.
ஏற்க்கனவே பெரியம்மாள் ஐஸ்வர்யாவிற்கு அதிகச் செல்லம் கொடுத்து அவளை கெடுத்து வைதிருப்பதாகப் பெரியப்பா மிகவும் கவலையுடன் இருந்தார். ஐஸ்வர்யாவிற்கு கல்யாணம் முடிவான பின்புதான் அவர் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார். இந்த ஐஸ்வர்யா கல்யாணம் நிச்சயமானப் பின்பாவது பழைய நட்புகளை தவிர்த்திருக்கலாம். அப்படியில்லாமல் உன் அண்ணன் மஹிந்தனே அவளைப்பற்றி ஆதாரத்துடன் மற்ற ஆண்களுடன் அவள் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை காட்டி இந்த கல்யாணம் நிறுத்திவிடுமாறு என்னிடம் கோபப்பட்டுப் பேசும்படி நடந்துகொண்டாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
அப்பொழுதே உன் அண்ணன் என்னிடம் கூறினான் அவளை கண்டித்துவையுங்கள் என்றும் என் ஸ்டேட்டஸ் என்னுடைய பெர்சனல் வாழ்கையில் அவளால் எந்த களங்கமும் ஏற்பட்டால் நான் உங்கள் தங்கை என்பதற்காக் சும்மா விடமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரின் கோபத்தின் அளவையும், அவரின் பவரையும் பற்றித் தெரிந்ததால் தான் அவளைக் கூப்பிட்டு ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்ணினேன். ஆனால் அவள் திரும்பவும் ஏதோ பிரச்சனையை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாள்.
“இப்பொழுதே கல்யாணத்தை நிறுத்துவதக்கான பேச்சை பெரியவர்களிடம் கூறச் சொல்லி அவர்களை சந்திக்க நம் வீட்டிற்கு உன் அண்ணன் வருவதாக போன் செய்தார்,” என்று கூறினான்.
அவன் கூறியதை கேட்ட மதுரா கல்யாணத்திற்குப் பின் விவாகரத்து ஆவதற்குப் பதில் இப்பொழுதே இந்த திருமணத்தை நிறுத்திவிடுவது நல்லதுதான். நீங்கள் என் அண்ணன் வரும் முன்பு பெரியவர்களை கூப்பிட்டு பேசிவிடுங்கள் அப்போதுதான் கொஞ்சம் நிதானமாக என்ன பேசலாம் என்று அவர்கள் முடிவெடுக்க முடியும், என்று கூறினாள்.
பார்த்தீபன் தன் அப்பாவையும் பெரியப்பாவையும் பார்த்துப் பேச எழுந்து சென்றான்.அவன் அறையைவிட்டு வெளியில் போனதும் மஹிந்தனை போனில் தொடர்பு கொள்ள முயன்றாள் மதுரா ஆனால், அவளின் அழைப்பை மஹிந்தன் ஏற்கவில்லை.
தொடரும்
{kunena_discuss:1081}