அவளது போராட்டங்களை அவனும் உணர்ந்தே இருந்தான்.அவளைக் காயப்படுத்த அவனுக்கு மட்டும் ஆசையா என்ன!!
அவளை பார்த்த நொடியில் இருந்து இதோ இந்த நொடி வரையிலுமே அவளுக்காக அவன் மனதில் பிரத்யேகமாக எழும் உணர்வில் எந்த மாற்றமுமே இல்லை.எப்போதுமே அவள் வேண்டுமென்ற துடிப்பு.
யாருமில்லாத உலகத்தில் தானும் அவளும் மட்டும் தனித்து வாழ வேண்டுமென்ற பேராசை அவன் மனதில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
காதல் என்பதை மீறி,அவள் மேல் அவனுக்கு வெறி என்று கூட கூறலாம்.உடல் தாபத்தை தீர்த்துக்கொள்ளும் வெறியாக மட்டுமே அது இருந்திருந்தால்,நிச்சயம் அதை முன்பே அவனால் தணித்துக்கொண்டிருக்க முடியும்.வாய்ப்புக்கள் ஏராளமாக தான் இருந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அவள் மேல் தனக்கிருந்த நம்பிக்கையை வைத்தே இந்த நொடி கூட அவளை முழுவதும் அவன் வசப்படுத்த முடியும்.ஆனால் அவன் முயலவில்லை
வசதி இருந்தாலும் சிறு வயதிலிருந்தே சொந்தபந்தம் இல்லாமல் தனித்து வாழ்ந்தவனால்,தனக்கு ஒரு காதலியாய்,மனைவியாய் தாயாய் குழந்தையாய்,தோழியாய் எதிராய் என அனைத்தும் அவளாக வேண்டும் என்ற பேராசைக்கு அவனால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியவில்லை.ஆனால் இந்த ஆசையை அடக்க அவனால் முடிந்தது.அதற்கும் காரணம் அவள் மேல் அவன் வைத்திருந்த மாறாத அன்பு தான்.
அவள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யக் கூடாது என்பதனால் தான்,தன் மேல் தவறே இல்லாத போது அவள் விலகி சென்ற போதும்,இப்போது இன்னொருவனை காதலித்த போதும்,இது தான் என் விதி என்ற எண்ணத்தில் விலகி இருந்தானே தவிர வேறு எதையுமே செய்ய நினைக்கவில்லை.
ஆனாலும் நெஞ்சுக்குள் ஏற்படும் ஒருவித தவிப்பை போக்க தனக்கென்று ஓர் உறவு வேண்டும் என்று அவன் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது.அவந்திகாவை தவிர வேறு யாரையும் உறவாக்கிக்கொள்ள மனம் சம்மதிக்கவில்லை.அதனாலையே இறுதி வழியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவிற்கு வந்தான்.
பிறக்கப் போவது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான்.தன் குழந்தை வடிவில் அவந்திகாவை தினம் தினம் காணலாம் என்பதையும் மீறி..தங்களது குழந்தை அவனுக்கு தாயாய்..தோழியாய் இருக்கும் அல்லவா.
ஒவ்வொரு நொடியும்,ஒவ்வொரு நாளும் தன்னுடைய குழந்தைக்காகவே வாழ ஆசை கொண்டான்.அதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை.அன்பை அளவோடு காட்ட வேண்டும் என்பது போன்ற விதிமுறையும் கூட இருக்கப் போவதில்லை.
இதை அவளிடம் அவன் கூறவேயில்லை என்பது தான் அவன் செய்த பிழை.காதலிக்கவில்லை என்றாலும் காதலை உணர வைத்தாலே நிச்சயம் பாதி வெற்றி கிடைத்தது போலத்தான்.
இப்போதும் தன்னிலை விளக்கமாய் எதுவும் கூற எண்ணமில்லாமல் தான் பேச்சை ஆரம்பித்தான்.
“என்னால உனக்கு ஒரு உறுதி தர முடியும் அவந்தி.எந்த சூழ்நிலையிலும் நம்ம குழந்தை தான் என்று யாருக்கும் அடையாளம் காட்டமாட்டேன்.என்னோட குழந்தையா மட்டுமே என் குழந்தை வளர்ந்தால் போதும்.எந்த சமயத்திலும் வேறொரு உறவில சிக்கிக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை அதிகமாகவே இருக்கு.உனக்கு இன்னும் பயம் விலகவில்லை என்றால்,நான் உனக்கு எழுதி தரேன்”என்றான்.
இந்த உறுதி யாருக்கு வேண்டும்! உன்னிடம் இருப்பது என் குழந்தை என்று என் மனதுக்கு தெரியுமே! அதுவே என்னை உயிரோடு கொல்வதற்கு போதுமே!
கலக்கம் தீராமல் அவனை பார்க்க,”உன..க்கு...உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா,வேண்டாம்டா அவந்தி.நான் டாக்டர்கிட்ட பேசறேன்”என்ற போது அவனுக்குள் வலி!!
இந்த ஆசை கூட நிறைவேறாதா!!
இந்த முறை அவனது வலியை கண்டுகொண்டாள்.இதுநாள் வரை உணராத அவனது காதலை இந்த நொடி உணர்ந்தாள் என்றால் பொய்யில்லை.
யாரோ ஒரு பெண்ணிற்காக,தன்னை பகடைக்காயாய் மாற்றிய யஷ்வந்த்தை விட..பலரின் முன் வர்ஷுவை தன் மார்பில் சாய்த்துக்கொண்ட அந்த யஷ்வந்த்தை விட எந்த விதத்தில் நிரேஷ் குறைந்து போனான்.
எனக்கே எனக்காக என்று என்னென்ன காரியங்கள் செய்திருக்கிறான்.இப்போது கூட எனக்காக தானே யோசிக்கிறான்.இது போல ஒரு காதலை ஏற்க என்னால் ஏன் முடியவில்லை-தவிப்புடன் அவனை பார்க்க..இன்னும் அதிலிருந்து நிரேஷ் மீளவேயில்லை.
எப்போதும் போல இப்போதும் எதைப்பற்றியும் சிந்திக்கும் எண்ணமில்லாமல்,அவனது கையில் தன் கையில் வைத்தாள்.
அந்த ஒரு செய்கையே அவனுக்கு போதுமானதாய் இருக்க,எப்போதும் கட்டுக்குள் இருக்கும் நிரேஷ் தன்னை மறந்தவனாய்,அவந்திகாவை அணைத்துக்கொண்டான்.