(Reading time: 13 - 25 minutes)

02. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

பொன் நிறத்தில் இருந்த தேகத்தில், இறுக மூடியிருந்த விழிகள், நீர்த்திவலைகளை சற்றே உதறிவிட்டு விட்டு, விழிகளைத் திறக்க,

“வாவ்…. வாட் அ பியூட்டிபுல் ஐஸ்……” என்றாள் ரித்தி விசிலடித்தபடி….

“காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா இரண்டு பேரும்?...”

சின்னதாக இருந்த விழிகள் சற்றே விரிய புதியவள் கேட்க, ஸ்வேதா மிடறு விழுங்கினாள் வேகமாக…

“உங்கிட்ட தான் வேதா கேட்குறா… பதில் சொல்லுடி….”

எடுத்து கொடுத்த ரித்தியினை ஸ்வேதா பஸ்பமாக்கிவிடுவதை போல் முறைக்க,

“இதற்கெல்லாம் நான் பயந்தவளா?...” என்றெண்ணியபடி, வெகு சாதாரணமாக வந்து வாசலில் நின்றிருந்தவளின் தோள் மீது கை வைத்தாள் ரித்தி…

“எடுடி… கையை….”

தன் மேல் விழுந்த கையை சட்டென தட்டி விட்டாள் அவள்…

“ஹேய்… ஏண்டி… காலையிலேயே கோச்சிக்கிற?... எல்லாம் இந்த வேதா குரங்குனால தான்… நான் எதுவும் பண்ணலை டார்லிங்க் நம்பு…..”

ரித்தி அவளின் தாடையை பிடித்து கொஞ்ச, கையை தட்டி விட்டாள் அவள் வேகமாக…

அறை எங்கும் இருந்த நீர்க்கோலத்தினை பார்த்தவள்,

“இதெல்லாம் யாரோட வேலை?...” எனக் கேட்க,

“அக்கா ரித்தி என்னை கிண்டல் பண்ணினா… அதான் நான் அவ மேல தண்ணீ எடுத்து ஊத்தினேன்… பதிலுக்கு அவளும் என் மேல தண்ணியை ஊத்திட்டா… எனக்கு கோபம் வந்துட்டு… அதான் அவமேல ஊத்துறேன்னு உங்கமேல ஊத்திட்டேன்… சாரிக்கா…”

ஸ்வேதா தன் தவறை ஒப்புக்கொள்ள, இப்போது பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்த ரித்தி,

“அய்யோ… டார்லிங்க்… நான் எதுவும் பண்ணலை…. அவ தான் முதல்ல என்னை கிண்டல் பண்ணினா…. அதான் நானும் கிண்டல் பண்ணினேன்… அவ்வளவுதான்… அப்புறம் உன் தங்க்ச்சி தான் என் மேல தண்ணீயை ஊத்தினா… சோ ஆரம்பிச்சது எல்லாமே அவ தான்…”

ரித்தி இலகுவாக கைவிரித்து சொல்ல,

ஸ்வேதாவை முறைத்துவிட்டு நகர்ந்தாள் அவள்…

“அவ தான் திருந்த மாட்டா… உனக்குமா புத்தியில்லை...” என அவளின் முறைப்பு சொல்லாமல் சொல்லிவிட்டு செல்ல,

“சந்தாக்கா… ப்ளீஸ்… நில்லுங்க…” என அவளின் பின்னேயே ஓடினாள் ஸ்வேதா…

“ஹேய்… சந்தா… எங்கடி போற?...”

ரித்தியும் சந்தாவை பின் தொடர, அவளோ குளியறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டாள்…

அவள் வரும் வரை இருவரும் அறைக்கதவினை பார்த்து காத்திருக்க, அவளும் காக்கவைத்திடாமல் விரைந்து வெளியே வர,

அவளை அணைத்துக்கொண்டாள் ரித்தி….

“வாவ்…. சந்தா…. செம அழகா இருக்குறப்போ…. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு…..”

என்றபடி சந்தாவின் கன்னங்களைப் பிடித்து ரித்தி கொஞ்சிட,

“ஐஸ்… வைக்காத… நகரு…..” என்றாள் சந்தா…

“ஏய்… வேதா… பார்த்துட்டு சும்மா நிக்குற… உன் அக்காவுக்கு கொஞ்சம் புரியுற மாதிரி எடுத்து சொல்லு….”

ரித்தி சொன்னதும், “சந்தாக்கா… நிஜமாவே நீங்க இன்னைக்கு செம அழகா இருக்குறீங்க….” என்றாள் ஸ்வேதாவும்…

“அதுசரி… கூட்டணி போட்டது போதும்… நீங்க வரீங்களா?... இல்ல நான் போகட்டுமா?...”

சந்தா சற்றே மிரட்டல் தொனியில் கேட்கவும்,

“அடியே… பரதேவதை… இருடி…. அவசரப்படாத… வந்துடுறோம்…” என்ற ரித்தி வேகமாக சென்று உடைமாற்றி வர, ஸ்வேதாவும் குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டு வந்தாள்…

இருவரும் வந்த்தும், ஆளுக்கொரு தட்டை எடுத்து பரிமாறிய சந்தா,

“சீக்கிரம் சாப்பிடணும் ரித்தி… நேரம் வேற இல்லை… சொல்லிட்டேன்…” என கராறாக கூற,

“சரி சரி… நீயும் உட்கார்….” என்றாள் ரித்தியும்…

மூவரும் அமர்ந்து உண்ண ஆரம்பிக்க,

“டார்லிங்க்… என்ன இன்னைக்கு அசத்திட்ட… இட்லி… சாம்பார்… எல்லாம் மணக்குதே….”

உச்சுக்கொட்டியபடி சாப்பிட்ட ரித்தியினைப் பார்த்து சந்தா முறைக்க,

“இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான் இருக்கு ரித்தி… சீக்கிரம் சாப்பிட்டுத்தொலை…” என்றாள் ஸ்வேதா….

“அதெல்லாம் எனக்குத் தெரியும்… நீ உன் வேலையைப் பாரு…” என்ற ரித்தி வழக்கம் போல தாமதமாகவே சாப்பிட்டு முடிக்க,

கோபமாக நின்றிருந்த சந்தாவின் அருகே சென்று, “போகலாமா?...” என்று கேட்க,

“இப்படி லேட்டா போறதுக்கு என்னைக்கு திட்டு வாங்கப்போறோமோ தெரியலை…” என்றாள் சந்தா பல்லைக்கடித்தபடி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.