பிறகு தன் அன்னையுடன் அவன் வீட்டிற்குச் சென்றதும், நிகேதன் அவனை போனில் அழைத்தான்...
"என்ன மச்சான்... அவரை பார்த்தீயா..?? என்ன சொன்னாரு.."
"விஷயத்தை சொன்னேன் டா... அவருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு... உடனே அவனை சும்மாவா விட்டீங்கன்னு கேட்டாரு... அப்புறம் அவனை அந்த வேலையை விட்டே தூக்கறன்னு சொன்னாரு... அந்த சிங்கப்பூர் ஆஃபிஸ்க்கும் போன் பண்ணி பேசினாரு... ஆனா இதுக்காகல்லாம் வேலையை விட்டு அனுப்ப முடியாது... வேணும்னா இப்போ அவனுக்கு ப்ரமோஷன் கிடைக்கறதா இருக்கு... அதை வேணும்னா கேன்சல் பண்ணிடலாம்னு அந்த ஆஃபிசர் சொன்னாரு... சரி நிருக்கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சதுக்கு கொஞ்சமாவது அவனுக்கு பாதிப்பு வரனும்... சரி அப்படியே பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்டா.."
...
This story is now available on Chillzee KiMo.
...
்து கைக்காட்டினாள்...
"ஏய்... நீ சொன்னதும் நான் வெளியப் போய்டுவன்னு நினைச்சியா...?? நான் அதுக்காகவா வந்தேன்... இங்கப் பாரு, இப்போ இந்த டைம் இந்த வீட்ல நீ மட்டும் தான் இருக்க... அது தெரிஞ்சு தான் நான் வந்திருக்கேன்.." என்று அவன் சொன்னதும், உள்ளுக்குள் கொஞ்சம் நடுங்கி தான் போனாள் அவள்.